News May 7, 2025
மயிலாடுதுறையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

மயிலாடுதுறையில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் உள்ள Loan Processing Officer பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் இங்கே<
Similar News
News January 5, 2026
மயிலாடுதுறை: அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் முழு நேர கிளை நூலகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு நூலகத்திற்கு அடிக்கல் நாட்டை பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை எம்பி சுதா, எம்எல்ஏ நிவேதா எம் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
News January 5, 2026
மயிலாடுதுறை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News January 5, 2026
மயிலாடுதுறை: மேம்பாலம் நாளை திறப்பு!

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கும்பகோணம் மார்க்கம் காவேரி நகர் பகுதியில் மொழிப்போர் தியாகி மாணவ மணி சாரங்கபாணி மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் சிதிலமடைந்து காணப்பட்டதால் தற்பொழுது மேம்பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நாளை டிசம்பர் 5ஆம் தேதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.


