News August 7, 2024

மயிலாடுதுறையில் மெமு ரயிலாக மாற்றம்

image

மயிலாடுதுறையில் இருந்து தினசரி காலை 8.05 மணிக்கு திருச்சி செல்லக்கூடிய ரயில் இன்று முதல் மெமு வண்டியாக மாற்றப்பட்டு இயங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று(அக.06) தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 20 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயங்கி வந்த நிலையில் தற்போது 8 பெட்டிகள் மட்டுமே இருக்கக்கூடிய மெமு ரயிலாக இயக்கப்பட உள்ளது.

Similar News

News October 20, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை முக்கிய அறிவிப்பு

image

மாவட்ட காவல் துறை தீபாவளியொட்டி செய்தி வெளியிடுட்டுள்ளது. இதில் வெடிக்காத பட்டாசுகளை கையால் தொடுவதோ, அதை ஒன்று சேர்த்து கொளுத்துவது அறவே கூடாது. கையில் பட்டாசை பற்ற வைத்து துாக்கி எறிவது தீ விபத்துக்கு முக்கிய காரணம். மேலும் அதிகம் புகை கக்கும் மத்தாப்புகளை கொளுத்தும் போது, அதிலிருந்து வெளிவரும் புகை, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் எனவே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

News October 20, 2025

மயிலாடுதுறை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை!

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் bankofbaroda.bank.in எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT

News October 20, 2025

மயிலாடுதுறை: பாதுகாப்பு பணியில் 474 போலீசார்!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளியையொட்டி 474 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றங்கள் குறித்தும் வெடி விபத்து குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சீருடையில் போலீசார் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இதைப்போல சாதாரண உடையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!