News May 6, 2024

மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தினால் அவதியுறும் பொதுமக்களின் நலன் கருதி மயிலாடுதுறை ஊர் காவல் படை சார்பில் நீர் மோர் பந்தல் இன்று மயிலாடுதுறையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து வட்டார தளபதி அலெக்சாண்டர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News April 19, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

image

சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதில் தங்கள் வாட்ஸ்அப்பிற்கு ஜியோ இன்டர்நெட் ஸ்பீட் 5ஜி நெட்வொர்க் என்ற பெயரில் ஏதேனும் APK கோப்பு வந்தால் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் உங்கள் தொலைபேசி சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்படும் காவல்துறை எச்சரித்துள்ளது. உறவினருக்காலுக்கும் ஷேர் செய்யுங்கள்

News April 19, 2025

மயிலாடுதுறை இளைஞர்களுக்கு உதவித்தொகை

image

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை விண்ணப்பிக்க மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் சென்று இலவச படிவத்தை பெற்று கொள்ளலாம். அல்லது https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை மே 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 19, 2025

இனி இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

image

மயிலாடுதுறையில் அனைத்து வகை கனிமங்களும் எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும் நடைசீட்டுகளை இனிமேல் இணைய வழி வாயிலாக மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 28ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ள நடைசீட்டுக்கள் வழங்கும் முறை 30ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. http://mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக குத்தகைதாரர்கள் நடைசீட்டு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!