News March 25, 2025

மயிலாடுதுறையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (மார்ச் 26) புதன்கிழமை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த எரிவாயு பயன்படுத்துவோர் சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம் என அறிவித்துள்ளனர். ஷேர் செய்யுங்கள் 

Similar News

News November 16, 2025

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நேற்றைய தினம் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று (நவ.16) காலை நிலவரப்படி மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

மயிலாடுதுறை: கறவை மாடு வாங்க மானியம்

image

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000 வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்பட உள்ளதாக மயிலாடுதுறை கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள நபர்கள் www.tabcedco.tn.gov.in என்ற இணைய முகவரி வாயிலாகவோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

News November 16, 2025

மயிலாடுதுறையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

image

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடை முழுக்கு எனும் கடைமுக தீர்த்தவாரி இன்று நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் 280 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் 30-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கேமரா பொருத்திய ஈகிள் வாகனம் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது

error: Content is protected !!