News March 25, 2025
மயிலாடுதுறையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (மார்ச் 26) புதன்கிழமை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த எரிவாயு பயன்படுத்துவோர் சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம் என அறிவித்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்
Similar News
News November 14, 2025
மயிலாடுதுறை ரயில் சேவை வழித்தடம் மாற்றம்

மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் நவம்பர் 1, 8,11,15,18 உள்ளிட்ட தேதிகளில் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் மதுரை, திண்டுக்கல் வழிக்கு பதிலாக காரைக்குடி, மானாமதுரை வழியாக செங்கோட்டை செல்லும். செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை வரும் ரயில் நவம்பர் 5, 12, 19, 26 புதன்கிழமைகளில் மட்டும் மதுரை திண்டுக்கல் மணப்பாறை வழியாக மயிலாடுதுறை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
மயிலாடுதுறை: இஸ்ரோவில் வேலை-இன்றே கடைசி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: இன்று (14.11.2025)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
மயிலாடுதுறை: அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு

புதுடெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாவண்ணம் மாவட்ட காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவசர காலங்களில் பொதுமக்கள் காவல்துறையினரின் உதவி பெற 100 மற்றும் 04364 -240100 ஆகிய தொலைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


