News March 25, 2025
மயிலாடுதுறையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (மார்ச் 26) புதன்கிழமை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த எரிவாயு பயன்படுத்துவோர் சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம் என அறிவித்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்
Similar News
News November 7, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொற்கை கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒன்றாக வாக்காளர்களுக்கு கணக்கிட்டு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 7, 2025
மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் ரபி 2025 பருவத்தில் பயிரிடப்பட்ட வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்ய வரும் 28.2.2026 ஆம் தேதி கடைசி நாளாகும். விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகை வாழைக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ. 3551.86 மரவள்ளிக்கு ரூ.2686.15 ஆகும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்
News November 7, 2025
மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு, தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.


