News April 13, 2024
மயிலாடுதுறையில் தபால் ஓட்டு செலுத்திய எஸ்பி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தனது வாக்கினை தபால் ஓட்டு மூலம் இன்று பதிவு செய்தார். அப்போது, தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு காவல் அதிகாரிகளும் தங்களது வாக்கினை செலுத்தினர்.
Similar News
News December 4, 2025
மயிலாடுதுறை: அனைத்து கட்சி பாக முகவர்கள் கூட்டம்

சீர்காழியில் அனைத்து கட்சி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. தாசில்தார் அருள் ஜோதி முன்னிலை வகிக்க தேர்தல் தனி பிரிவு தாசில்தார் இளவரசு வரவேற்றார். கோட்டாட்சியர் சுரேஷ் புதிய படிவத்தை அனைத்து கட்சி பாக முகவர்களுக்கும் வழங்கி பேசினார். இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News December 4, 2025
மயிலாடுதுறை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

மயிலாடுதுறை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் இங்கு <
News December 4, 2025
மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு!

TNUSRB நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்காக மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தேவையான ஆவணங்களுடன் வேலை வாய்ப்பு மையத்தை நேரில் அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்


