News April 13, 2024

மயிலாடுதுறையில் தபால் ஓட்டு செலுத்திய எஸ்பி

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தனது வாக்கினை தபால் ஓட்டு மூலம் இன்று பதிவு செய்தார். அப்போது, தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு காவல் அதிகாரிகளும் தங்களது வாக்கினை செலுத்தினர்.

Similar News

News December 10, 2025

மயிலாடுதுறை: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு!

image

மயிலாடுதுறையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில்<<>> விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 10, 2025

மயிலாடுதுறை: மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

image

வட தமிழகம் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் காற்று வீசும் என்பதாலும், மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 28 மீனவ கிராம மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது, என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

News December 10, 2025

மயிலாடுதுறை: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் பெய்த மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பா உள்ளிட்ட முக்கிய பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டதால், அறிவிப்பு செய்யப்பட்ட நிவாரணத் தொகையை விரைவில் வழங்க முன்வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

error: Content is protected !!