News March 28, 2025
மயிலாடுதுறையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை கல்லூரியில் நாளை (மார்ச்.29) காலை 9 மணி – 3 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. அதில் பயோடேட்டா, கல்வி சான்றுகள், ஆதார் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்கள்.
Similar News
News December 6, 2025
மயிலாடுதுறை: போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
News December 6, 2025
மயிலாடுதுறையில் தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 13-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் முதன்மை மாவட்ட நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது. சமரசத்துக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய சிவில் வழக்குகள் மோட்டார் வாகன விபத்து உள்ளிட்ட வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் பேசி சமரசம் செய்து கொள்ளலாம் என சட்டப்பணி குழு தலைவர் நீதிபதி சுதா தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
மயிலாடுதுறை: பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து

கொள்ளிடம் அருகே ஆனந்த கூத்தன் பகுதியில் பைபாஸ் சாலையில், சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற கார், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது, காரின் பின்னால் வந்த மற்றொரு கார் மோதியதில், முன் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


