News March 28, 2025

மயிலாடுதுறையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை கல்லூரியில் நாளை (மார்ச்.29) காலை 9 மணி – 3 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. அதில் பயோடேட்டா, கல்வி சான்றுகள், ஆதார் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்கள்.

Similar News

News October 30, 2025

மயிலாடுதுறை: அதிரடி காட்டிய போலீசார்

image

திருவெண்காடு மணி கிராமத்தை சேர்ந்த அன்பழகன் தனது மகன் செல்வத்தை கடந்த 2022 முதல் காணவில்லை என புகார் அளித்திருந்தார். போலீசார் அவரை தேடிவந்த நிலையில் எஸ்.பி-யின் வாராந்தர மனு விசாரணை நாள் கூட்டத்தில் பங்கேற்று தனது மகனை கண்டுபிடித்து தரும்படி கோரிக்கை விடுத்தார். எஸ்.பி உத்தரவின்படி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு செல்வத்தை சென்னை மேடவாக்கத்தில் கண்டுபிடித்து இன்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

News October 30, 2025

மயிலாடுதுறை மக்களுக்கு எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் வெளிநாட்டில் வேலை தொடர்பாக இணையதளங்களில் வரும் போலி விளம்பரங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். விளம்பரங்களை நம்பி உங்களது பணத்தை இழக்க நேரிடும். எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 30, 2025

மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!