News April 17, 2025
மயிலாடுதுறையில் கட்டுரை, பேச்சுப் போட்டி, ஆட்சியர் அழைப்பு

மயிலாடுதுறை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சி சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 9ஆம் தேதி நடைபெற உள்ளது. பிளஸ் 1 & பிளஸ் 2 மாணவர்களுக்கு தியாகி நாராயணசாமி நகராட்சி பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு ஞானாம்பிகை கல்லூரியிலும் காலை 9 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News July 11, 2025
மயிலாடுதுறை: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

➡️மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 15,880 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!
News July 11, 2025
மயிலாடுதுறையில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் இன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலை தேடும் இளைஞர்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)
News July 11, 2025
மயிலாடுதுறை: நாளை உழவரை தேடி வேளாண் முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம் மயிலாடுதுறை வட்டாரத்தில் உள்ள குளிச்சார் மற்றும் சோழம்பேட்டை கிராமங்களில் நாளை 11.7.2025 நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம் என மயிலாடுதுறை வேளாண் இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.