News August 14, 2024
மயிலாடுதுறையில் இளைஞர் பரிதாப பலி

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தகுடியில் பாலம் கட்டுமானத்திற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த இளைஞர் உயிரிழந்தார். பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த மணிகண்டன் தலையில் கம்பி குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலம் கட்டுமானப் பணி பாதுகாப்பு தடுப்புகள் இன்றி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
மயிலாடுதுறை மாவட்ட தீயணைப்பு நிலைய எண்கள்!

உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துகள் ஏற்பட்டாலோ அல்லது அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ தயக்கமின்றி மயிலாடுதுறை மாவட்ட தீயணைப்புத் துறையின் அவசர எண்ணை அழைக்கலாம்.
1. குத்தாலம்-04364234101
2. மணல்மேடு-04364254101
3. சீர்காழி-04364270101
4. மயிலாடுதுறை-04364222101
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 25, 2025
மயிலாடுதுறையில் இப்படி ஒரு துறைமுகமா!

மயிலாடுதுறை மாவட்ட மக்களே! தரங்கம்பாடி சிறப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா? தரங்கம்பாடி முற்காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கியது. வங்கக் கடலின் கிழக்கு கடற்கரையோரத்தில், மயிலாடுதுறைக்கு தென்கிழக்கே 30 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அழகும் சிறப்பும், வியப்பும் கொண்ட இடமாகும். இது சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்கவேண்டிய இடமாகும். SHARE பண்ணுங்க!
News December 25, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

TNPSC விரிந்துரைக்கும் தேர்வானது வருகிற 27 – 30-ந்தேதி வரை மயிலாடுதுறை தியாகி ஜி நாராயண சாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்குள் வரவேண்டும் என்றும் பிற்பகல் தேர்விற்கு மதியம் 2 மணிக்கு மேல் வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது எனவும் கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


