News April 7, 2025

மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குமளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் குரு (36). குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த இவருக்கு கிட்னி பாதிப்பு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இவர் தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வளவனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 21, 2025

விழுப்புரம்: கீழே விழுந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலி!

image

விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், நேற்று (நவ.20) மரக்காணத்திலிருந்து-திண்டிவனத்துக்கு தனது மொபட்டில் சென்றுள்ளார். அப்போது, திண்டிவனம் நெடுஞ்சாலையில், பிரம்ம தேசம் அருகே நிலை தடுமாறி மொபெட்டிலிருந்து கீழே விழுந்த கண்ணன் காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பிரம்மதேசம் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 21, 2025

விழுப்புரம்: கீழே விழுந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலி!

image

விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், நேற்று (நவ.20) மரக்காணத்திலிருந்து-திண்டிவனத்துக்கு தனது மொபட்டில் சென்றுள்ளார். அப்போது, திண்டிவனம் நெடுஞ்சாலையில், பிரம்ம தேசம் அருகே நிலை தடுமாறி மொபெட்டிலிருந்து கீழே விழுந்த கண்ணன் காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பிரம்மதேசம் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 21, 2025

விழுப்புரம்: 10th முடித்தால் உளவுத்துறையில் வேலை!

image

விழுப்புரம் மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>CLICK<<>> செய்யவும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க

error: Content is protected !!