News April 7, 2025
மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குமளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் குரு (36). குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த இவருக்கு கிட்னி பாதிப்பு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இவர் தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வளவனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 5, 2025
விழுப்புரம் நாதக வேட்பாளர் அறிவிப்பு – பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 100 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பெண் மருத்துவர் “அபிநயா” போட்டியிடுவதாக இன்று (டிச.05) அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 5, 2025
விழுப்புரம்: பிணையம் இல்லாமல் ரூ.10 கோடி வரை கடன்!

புதிய சிறு, குறு நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கு ரூ.10 கோடி வரை பிணையமில்லாத கடன்களை பெற உதவி செய்கிறது மத்திய அரசின் CGTMSE திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வங்கிகளை அணுகி, வணிக கடனுக்கு விண்ணப்பித்த பிறகு, பிணையமோ அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதமோ இல்லாமல் ரூ.10 கோடி வரை கடன் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கு <
News December 5, 2025
விழுப்புரம் பெண்களே.. இதை SAVE பண்ணிக்கோங்க!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!


