News March 24, 2025

மன்னார்குடி: 30 நாட்களுக்கு நடைபெறும் திருவிழா

image

வைணவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி கோயில் பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. வேறெந்த ஊரிலும் இல்லாத வகையில் மன்னார்குடியில் மட்டுமே 18 நாட்கள் திருவிழா, 12 நாட்கள் விடாயாற்றி திருவிழா என மொத்தம் 30 நாட்கள் ஊரே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் உங்க ஊர் சிறப்பு குறித்து கமெண்ட் பண்ணுங்க.. இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News September 16, 2025

திருவாரூர்: கணவன்-மனைவி தற்கொலை

image

திருவாரூர், சரபோஜிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜு-மல்லிகா தம்பதியினர். இவர்களது கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களது உறவினர்களிடம் தகவல் கூறினர். இதையடுத்து வீட்டை திறந்து பார்த்த போது, கணவன்-மனைவி இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பேரளம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News September 15, 2025

திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.15) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 15, 2025

திருவாரூர்: இழந்ததை மீட்டுத் தரும் கோயில்

image

திருவாரூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் முருகனின் சிலையை வடித்த சிற்பியின் இரு கண்களை, முத்தரச சோழன் தானமாக பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு முருகன் கண்களை வழங்கியதால் எண்கண் முருகன் என பெயர் வந்துள்ளது. இதனால் இங்கு வழிபட்டால் இழந்தவை எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!