News January 24, 2025
மன்னார்குடிக்கு வருகை தரும் பிரேமலதா விஜயகாந்த்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நாளை (ஜன.25) தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மன்னார்குடிக்கு வருகை தர உள்ளார். இந்நிலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் பணியில் திருவாரூர் மாவட்ட தேமுதிகவினர் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News November 28, 2025
திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.28) அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!
News November 28, 2025
திருவாரூர்: புயல் அவசர உதவி எண்கள்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், திருவாரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
திருவாரூர் மாவட்டத்தில் தடை

திருவாரூர் மாவட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முத்துப்பேட்டை, ஜாம்பவனோடை, செங்காடு, முனங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்களை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் எனவும் மீன்வளத்துறை அறிவுறித்துள்ளது.


