News April 15, 2024
மனைவி கண்டித்ததால் கணவா் தற்கொலை

போடி பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கா். இவரது மனைவி முத்துமாரி. ரவிசங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முத்துமாரி அதனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரவிசங்கா் நேற்று முன் தினம் (ஏப்.13) விஷம் குடித்த நிலையில் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சைப்பலனின்றி நேற்று (ஏப்.14) உயிரிழந்தாா். இதுகுறித்து போடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 3, 2025
தேனி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 8 இன்று மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News December 3, 2025
தேனி: டிகிரி முடித்தால் SBI வங்கியில் வேலை ரெடி.. NO EXAM

தேனி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 3, 2025
தேனி: மனைவி கோபித்து கொண்டதால் கணவன் தற்கொலை

தேனி, சீலையம்பட்டியை சேர்ந்த சதீஷ்க்கும் (35). இவரது மனைவி முனீஸ்வரிக்கும் அடிக்கடி தகாராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முனீஸ்வரி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். சதீஸ், முனீஸ்வரி வீட்டிற்கு சென்று அவரை வீட்டிற்கு வருமாறு அழைத்தும், அவர் வர மறுத்தாதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சதீஸ் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் விசாரனை.


