News April 15, 2024
மனைவி கண்டித்ததால் கணவா் தற்கொலை

போடி பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கா். இவரது மனைவி முத்துமாரி. ரவிசங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முத்துமாரி அதனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரவிசங்கா் நேற்று முன் தினம் (ஏப்.13) விஷம் குடித்த நிலையில் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சைப்பலனின்றி நேற்று (ஏப்.14) உயிரிழந்தாா். இதுகுறித்து போடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
தேனியில் மின்சாரம் தாக்கி தாய், மகள் காயம்

பெரியகுளத்தில் டீ கடை நடத்தி வருபவர் தாரிக். இவரது மனைவி ஹரினா துணிகளை துவைத்து கொடி கம்பியில் காயப் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக துணி உயர் மின்கம்பியில் விழுந்துள்ளது. அதை எடுக்க முயன்ற போது ஹரினா, இவரது மகள் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதனால் காயமடைந்த இருவரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தென்கரை போலீசார் விசாரணை.
News December 6, 2025
தேனி: அரசு பேருந்து ஏறி இறங்கியதில் முதியவர் உயிரிழப்பு

தேனியை சேர்ந்தவர் விஜயன் (63). இவர் நேற்று (டிச.5) ஆண்டிபட்டியில் நடந்த துக்க நிகழ்வில் கலந்து விட்டு அரசு பேருந்தில் தேனி வந்துள்ளார். தேனி புதிய பேருந்து நிலையம் அருகே விஜயன் பேருந்தில் இருந்து இறங்கிய போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பேருந்தின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். விபத்து குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு.
News December 6, 2025
தேனி: கம்மியான விலையில் கார், பைக் வேண்டுமா?

தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் போதை பொருள் கடத்தலில் கைப்பற்றப்பட்ட வழக்குளில் பறிமுதல் செய்யப்பட்ட 30 டூவீலர்கள், 2 மூன்று சக்கரம், 30 நான்கு சக்கர வாகனம், 4 லாரிகள் மற்றும் 6 படகுகள் மொத்தம் 72 வாகனங்கள், 22, 23ம் தேதியில் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுக்க விரும்பும் தேனி மாவட்டத்தை சேர்ந்தோர் 9788924045 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை SHARE IT.


