News April 24, 2025

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது!

image

திண்டுக்கல்: மைலாப்பூரைச் சேர்ந்தவர் வில்லியம்சார்லஸ் (41). இவருக்கும் இவரது மனைவி வேளாங்கண்ணி லீமா ரோஸ் (39) என்பவருக்கும் குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வில்லியம்சார்லஸ், மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாலுகா போலீசார் வில்லியம்சார்லஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News October 16, 2025

திண்டுக்கல்: கொலை வழக்கில் தாய், மகன் கைது

image

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, கூட்டாத்து அய்யம்பாளையத்தில், இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்த மருமகன் ராமச்சந்திரனை அவரது மாமனார் சந்திரன் அருவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த கொலைக்கு எதிராக ராமச்சந்திரன் உறவினர்கள் திண்டுக்கல் மருத்துவமனை முற்றுகையிட்டனர். SP உத்தரவில் தீவிர விசாரணை நடத்தி சந்திரனின் மனைவி அன்புச்செல்வி மற்றும் அவரது மகன் ரிவீன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.

News October 16, 2025

திண்டுக்கல்லில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

image

திண்டுக்கல் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.

1)ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE!

News October 16, 2025

திண்டுக்கல்: 13 ஆண்டுகள் தலைமறைவான குற்றவாளி கைது

image

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு கொலை முயற்சியில் ஈடுபட்டது கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வர்கீஸ்(40) என்பதை திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிணையில் வந்த அவர் 13 ஆண்டுகள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நிலையில் நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் விதிக்கப்பட்டது. இந்நிலையில்,அவரை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!