News October 9, 2024

மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவர்

image

சாக்கோட்டை அருகே உள்ள பெரியகோட்டை கருத்தாண்டி குடியிருப்பை சேர்ந்தவர் செல்லையா(58).இவரது இரண்டாவது மனைவி கருப்பாயி. கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு(அக்.07)மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்லையா, கருப்பாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். அவரை சாக்கோட்டை போலீசார் நேற்று (அக்.08)கைது செய்தனர்.

Similar News

News December 9, 2025

சிவகங்கை: இலவச தையல் மிஷின் – ஆட்சியர் அழைப்பு!

image

சிவகங்கை மாவட்டம், தகுதியுடைய முன்னாள் படைவீரர் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் ஆகியோர் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு வருகின்ற 15.12.2025 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

சிவகங்கையில் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 10.12.25 (புதன்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

சிவகங்கை: SBI வங்கியில் வேலை., தேர்வு இல்லை! APPLY NOW

image

சிவகங்கை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள்<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!