News April 1, 2025
மனைவியுடன் சண்டை… சோகத்தில் கணவன் தற்கொலை !

கரூர்: கடவூர் தாலுகா சேர்வைக்காரன்பட்டி அடுத்த களத்துப்பட்டியைச் சேர்ந்த தம்பதி பழனியம்மாள் – மலைச்சாமி. இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மனமுடைந்து போன மலைச்சாமி இன்று(ஏப்.1) வீட்டின் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News October 27, 2025
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

கரூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தலைவர்/கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நாளை (28.10.25) காலை 10:30 மணிஅளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ள இரண்டாம் தளத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் 10 நிமிடம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி அளிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
News October 27, 2025
கரூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கே பேட்டை மற்றும் வதியம் ஆகிய பகுதிகளில் நாளை, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதில் கே பேட்டை மற்றும் வதியம் பகுதியை சேர்ந்த அனைவரும் தங்களது கோரிக்கைகளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் சமர்ப்பிக்கலாம். இதில் 13 துறைகள் 43 சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த முகாம் கே பேட்டை சமுதாயக் கூடத்தில் நடைபெற உள்ளது.
News October 27, 2025
கரூர்: கோர விபத்தில் தாய் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில், அஜித் குமார் என்பவர் தனது தாய் ராணியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ராணி என்பவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


