News September 12, 2024
மனப்பாச்சி கிராமத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் ஆராம் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மனப்பாச்சி கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று கூறி அவர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்த அவர் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இன்று மனப்பாச்சி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.
Similar News
News November 14, 2025
கள்ளக்குறிச்சி: ஹோட்டலில் 32 கிலோ குட்கா!

கள்ளக்குறிச்சி: புதூர் கிராமத்திலுள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் நேற்று (நவ.13) உதவி ஆய்வாளர் சலாம் உசேன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது அரசால் தடை செய்யப்பட்ட 32.5 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்த நிலையில், அவற்றை பறிமுதல் செய்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.
News November 14, 2025
கள்ளக்குறிச்சி: HORN அடித்ததற்கு கொலை மிரட்டல்!

தாவடிப்பட்டையைச் சேர்ந்த அப்பாஸ் தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று (நவ.13) பேருந்தில் கரடிசித்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, முன்னால் ஆட்டோ ஓட்டி சென்ற ராஜபாண்டி, சஞ்சய் இருவரும் பேருந்திற்கு வழிவிடாமல் சென்றுள்ளனர். இந்நிலையில், அப்பாஸ் Horn அடித்ததற்காக, பேருந்தை மறித்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 14, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


