News September 12, 2024
மனப்பாச்சி கிராமத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் ஆராம் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மனப்பாச்சி கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று கூறி அவர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்த அவர் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இன்று மனப்பாச்சி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.
Similar News
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: பண்ணை அமைக்க விருப்பமா? ரூ.50 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News December 13, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியரின் முக்கிய தகவல்!

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சமுதாய & வகுப்பு நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார்’ விருது தமிழக முதல்வரால் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் அனைவரும் இவ்விருதினை பெற தகுதி உடையவர்கள். இவ்விருதுக்கான விண்ணப்பத்தை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை வரும், டிச.15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்.
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

கள்ளக்குறிச்சி மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT


