News August 3, 2024
மத்திய, மாநில அரசுகள் மௌனம் காப்பது ஏன்?

மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மௌனம் காப்பது ஏன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். கிண்டியில் இன்று பேசிய அவர், ஆளுநருக்கு மீண்டும் பதவி வழங்குவது மத்திய அரசின் நிலைபாடு என்றார். பிரதமர் அரசியலமைப்பு படி ஆட்சி நடத்த வேண்டும் என்கிறார். ஆனால், வெறும் வார்த்தையாக மட்டும் இல்லாமல் மாநில அரசுகளுக்கு உரிமையை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
Similar News
News November 23, 2025
சென்னை: வாடகை கேட்ட HOUSE OWNERக்கு நேர்ந்த துயரம்

47 வயது பெண்ணின் கொருக்குப்பேட்டை வீட்டில் ராபர்ட் என்பவர் கடந்த பிப்ரவரி முதல் வாடகைக்கு குடியிருந்தார். ஆக மாதம் முதல் வாடகை பணம் சரியாக வழங்காமல் இருந்ததால், உரிமையாளர் கேட்டபோது, அவரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, செல்போன் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனால் பெண்ணை தொடர்பு கொண்டு சிலர் அநாகரிகமாக பேசியுள்ளனர். புகாரின் பேரில் V-4 இராஜமங்கலம் போலீசார் ராபர்ட்டை நேற்று கைது செய்தனர்.
News November 23, 2025
மெரினா கடற்கரையில் இன்று கலாச்சார கலைவிழா

சென்னை, மெரினா கடற்கரையின் நீலக் கொடி பகுதியில் இன்று மாலை 5:30 மணிக்கு கலாச்சார கலைவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் நம் பாரம்பரியத்தை கொண்டாடும் இந்த நிகழ்வில் பெரிய மேளம், சேவையாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட கலைகள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழர் மரபை அனுபவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
ரு.2,036 கோடியில் 28 புதிய ரயில்கள் வாங்க டெண்டர்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), முதற்கட்ட வழித்தட திட்டத்திற்காக தோராயமாக ரூ.2,036 கோடி மதிப்பில் 28 புதிய ரயில்கள் வாங்க டெண்டர் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலும் 6 பெட்டிகளைக் கொண்டிருக்கும். இந்தப் புதிய ரயில்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். இது சென்னையின் விரிவடையும் மெட்ரோ சேவைக்கு உறுதுணையாக இருக்கும்.


