News August 3, 2024
மத்திய, மாநில அரசுகள் மௌனம் காப்பது ஏன்?

மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மௌனம் காப்பது ஏன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். கிண்டியில் இன்று பேசிய அவர், ஆளுநருக்கு மீண்டும் பதவி வழங்குவது மத்திய அரசின் நிலைபாடு என்றார். பிரதமர் அரசியலமைப்பு படி ஆட்சி நடத்த வேண்டும் என்கிறார். ஆனால், வெறும் வார்த்தையாக மட்டும் இல்லாமல் மாநில அரசுகளுக்கு உரிமையை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
Similar News
News October 17, 2025
சாதித்து காட்டிய சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 28 வயது கூலித் தொழிலாளி சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த செப்.26-ல் பூங்கா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, விபத்தில் சிக்கி அவருக்கு கை சிதைந்தது. இந்த நிலையில், இழந்த ஒரு கையை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் மீட்டுக்கொடுத்துள்ளனர். இந்த சிகிச்சை இந்தியாவிலேயே இங்குதான் முதல் முறை நடைபெறுகிறது.
News October 17, 2025
சென்னை மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, சென்னை மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மழை காலங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், வெளிப்புற மின் கேபிள்களை தொட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவசர உதவிக்கு 100 மற்றும் Kaaval Uthavi செயலியை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணி இதை உடனே தெரியப்படுத்துங்க.
News October 17, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில்இன்று (16.10.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.