News October 23, 2024

மத்திய போக்குவரத்து துறை அமைச்சருடன் தஞ்சை எம்.பி சந்திப்பு

image

டெல்லியில் இன்று தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நித்தின் கட்கரியை நேரில் சந்தித்து தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான பல்வேறு சாலை திட்டங்கள் மற்றும் திருவையாறு சட்டமன்றத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வெண்ணாற்றின் குறுக்கே தென்பெரம்பூரில் புதிய உயர்மட்ட பாலம் அமைத்திடவும் கோரிக்கை மனுவை அளித்தார். 

Similar News

News December 10, 2025

தஞ்சாவூர்: போலீஸ் என கூறி ரூ.44 லட்சம் கொள்ளை

image

மன்னார்குடியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கார்த்திக்கின் என்பவரின் சகோதரர் அர்ஜுன், பணியாளர் பிரதீபன் ஆகியோர் தஞ்சையில் இருந்து ரூ.44 லட்சத்தை பெற்றுக்கொண்டு, ஊர் திரும்பியுள்ளனர். அப்போது, வாண்டையார் இருப்பு பேருந்து நிறுத்தம் அருகே மர்ம நபர் ஒருவர் தன்னை குற்றப்பிரிவு காவலர் என கூறி, அவர்களிடமிருந்த பணம் மற்றும் செல்போன்களை பறித்து தப்பிச் சென்றார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News December 10, 2025

தஞ்சாவூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில்,<> http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை SHARE செய்யுங்கள்!

News December 10, 2025

தஞ்சாவூர்: பள்ளி மாணவி தற்கொலை – பெரும் சோகம்

image

திருவிடைமருதூரைச் சேர்ந்தவர் மாணவி கல்பனா. 10 ஆம் வகுப்பு படித்துவரும் இவர், சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கல்பனா உடல்நிலை சரியில்லை என பள்ளிக்குச் செல்லாமல், பெற்றோர் வெளியே சென்ற நேரம் பார்த்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்வம பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!