News June 27, 2024

மத்திய ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்த நாமக்கல் எம்.பி

image

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி நேற்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிஜா சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற ஜவுளித்தொழில் மிகவும் நலிவடைந்து வருவதால் இத் தொழில் செய்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அமைச்சர் துறை சார்ந்த அதிகாரிகளை கோவைக்கு அழைத்து வந்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.

Similar News

News December 6, 2025

நாமக்கல்: விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை!

image

தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுடன், பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது. எனவே, நாமக்கல்லை சேர்ந்த பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக வளாகங்கள் இவ்விருதுக்கு ஜன.15க்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

News December 6, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வு, மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த விலை உயர்வு எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த விலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News December 6, 2025

நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.06) நாமக்கல் – (தங்கராஜ் – 9498170895), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (இளமுருகன் – 6374414072) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!