News June 27, 2024
மத்திய ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்த நாமக்கல் எம்.பி

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி நேற்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிஜா சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற ஜவுளித்தொழில் மிகவும் நலிவடைந்து வருவதால் இத் தொழில் செய்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அமைச்சர் துறை சார்ந்த அதிகாரிகளை கோவைக்கு அழைத்து வந்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.
Similar News
News December 20, 2025
நாமக்கல்லில் யார் அதிகம் தெரியுமா?

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 12,72,954 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 617269 பெண் வாக்காளர்கள் 655490 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 195 பேர் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 193706 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 20, 2025
திருச்செங்கோட்டில் தட்டி தூக்கிய பொறுப்பாளர்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி 29-வது வார்டைச் சேர்ந்த அஇஅதிமுக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, தங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிமுக நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வின் போது உடன் நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News December 20, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (19.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


