News June 27, 2024
மத்திய ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்த நாமக்கல் எம்.பி

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி நேற்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிஜா சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற ஜவுளித்தொழில் மிகவும் நலிவடைந்து வருவதால் இத் தொழில் செய்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அமைச்சர் துறை சார்ந்த அதிகாரிகளை கோவைக்கு அழைத்து வந்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.
Similar News
News December 17, 2025
வேலகவுண்டம்பட்டி அருகே பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்

வேலகவுண்டம்பட்டி அருகே தட்டாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் இவரது மனைவி ரங்கம்மாள் வயது 60 இவர் தனது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் இந்த நிலையில் ரங்கம்மாள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென மயங்கிய கீழே விழுந்தார் அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததில் மருத்துவர் பரிசோதனை செய்து இறந்ததாக தெரிவித்தார். போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.
News December 17, 2025
நாமக்கல்: மின்தடை அறிவிப்பு! ரெடியா இருங்க

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (டிச.18) பராமரிப்பு காரணமாக காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, கொல்லிமலை, காரவள்ளி, உத்திரகிடிகாவல், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி, குமாரபாளையம் பார்க், ஜங்கமநாயக்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, பில்லூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
News December 17, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


