News August 14, 2024
மத்திய அரசு ரூ.5,000, தமிழக அரசு ரூ.5,000 அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஏற்படும் போது விபத்தில் படுகாயமடைந்த நபர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்லும் நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி செய்யும் நபர்களுக்கு Good Samaritan Scheme திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.5,000 ஊக்கத்தொகையும், தமிழக அரசு ரூ.5,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம். சரயு அறிவித்துள்ளார்.
Similar News
News November 30, 2025
கிருஷ்ணகிரி: வெவ்வேறு இடத்தில் 3 பேர் உயிரிழப்பு!

போச்சம்பள்ளி அருகே கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் கோகுல் (12) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், சூளகிரி அருகே லாரி மோதி வடமாநில ஓட்டுநரும், போச்சம்பள்ளியில் டிராக்டர் மோதி தொழிலாளி பழனியப்பனும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சமீப காலமாக விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த கோரிக்கை வைக்கின்றனர்.
News November 30, 2025
கிருஷ்ணகிரி: வெவ்வேறு இடத்தில் 3 பேர் உயிரிழப்பு!

போச்சம்பள்ளி அருகே கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் கோகுல் (12) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், சூளகிரி அருகே லாரி மோதி வடமாநில ஓட்டுநரும், போச்சம்பள்ளியில் டிராக்டர் மோதி தொழிலாளி பழனியப்பனும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சமீப காலமாக விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த கோரிக்கை வைக்கின்றனர்.
News November 30, 2025
‘டிட்வா’ புயலால் கிருஷ்ணகிரிக்கு ORANGE ALERT!

வட கடலோரப் பகுதியை நோக்கி நகரும் ‘டிட்வா’ புயலால் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அண்டை மாவட்டங்களான தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வர வேண்டாம். மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


