News June 27, 2024

மத்திய அரசுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்

image

மதுரையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நுழைவாயில் முன் வழக்கறிஞரகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய சட்டங்கள் வழக்கறிஞர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாலும், இந்திய அரசியலமைப்பு பிரிவு 348க்கு எதிராக நிறைவேற்றப்பட்டதாலும் அவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Similar News

News December 3, 2025

மதுரை: கேஸ் புக்கிங் செய்ய வந்தது மாற்றம்!

image

மதுரை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News December 3, 2025

மதுரை: டீக்கடையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

image

வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா எனுமிடத்தில் டீக்கடை ஒன்று உள்ளது. நேற்றிரவு பெய்த மழை காரணமாக, கடையில் அலங்காரத்திற்காக தொங்க விடப்பட்ட சீரியல் விளக்குகளில் இருந்து மின்சாரம் கசிந்துள்ளது. இதை தொட்ட டீ மாஸ்டர் பாலகுரு (50) கீழே விழ, அவரை காப்பாற்ற முயன்ற கடை உரிமையாளர் மகன் ரஞ்சித் குமார் (35) என இருவரும் மீதும் மின்சாரம் தாக்கியது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News December 3, 2025

மதுரை: ஜாமீனில் வந்தவரை கொலை செய்த 3 பேர் கைது

image

மதுரை மீனாட்சிபுரம் பாண்டித்துரை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளிவந்த அவரை நாடக மேடையில் படுத்து தூங்கிய போது, மர்ம கும்பலால் பாண்டித்துரையை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பியது. இது தொடர்பாக செல்லூர் போலீசார் விசாரணையில் முன் விரோத காரணமாக கொலை நடந்தது எனவும், பாண்டித்துரையுடன் சுற்றித்திரிந்த செல்லூர் ராஜதுரை (35), மணிரத்தினம் (34), டேவிட் அந்தோணி ராஜ் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!