News June 27, 2024
மத்திய அரசுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்

மதுரையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நுழைவாயில் முன் வழக்கறிஞரகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய சட்டங்கள் வழக்கறிஞர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாலும், இந்திய அரசியலமைப்பு பிரிவு 348க்கு எதிராக நிறைவேற்றப்பட்டதாலும் அவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Similar News
News September 19, 2025
மதுரை-குருவாயூர் ரயில் பகுதியளவு ரத்து

மதுரையில் இருந்து ராஜபாளையம், செங்கோட்டை வழியாக குருவாயூர் செல்லும் ரெயில் (வ.எண்.16327) நாளை (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் குருவாயூர்-மதுரை ரெயில் (வ.எண். 16327) வருகிற 21-ந் தேதி குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கொல்லத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு மதுரை புறப்படும்.
News September 19, 2025
மதுரையில் பள்ளிக்கு சென்ற சிறுமியை கடித்து குதறிய நாய்

மதுரை மாநகராட்சி 45 ஆவது வார்டுக்குட்பட்ட காமராஜபுரம் குமரன்குறுக்குத்தெரு பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி பள்ளிக்கு சென்றபோது தெருநாய் விரட்டி கடித்து குதறியது. இதில் சிறுமியின் முகம், கால் ஆகிய பகுதிகளில் கடும் காயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிறுமிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.குழந்தைகள் வைத்திருபோருக்கு SHARE செய்து விழிப்புணர்வுடன் இருக்கு சொல்லுங்க.
News September 19, 2025
மதுரை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மதுரை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!