News March 26, 2025

மத்திய அரசிடம் சிறப்பு மானியம் கேட்கப்படும் – முதல்வர் ரங்கசாமி

image

புதுச்சேரி சட்டசபை கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதத்தில் நேற்று பேசிய முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்வாதார திட்ட பெயரில் ஆசிய வங்கியிடம் இரு கட்டமாக ரூ.4,750 கோடி கடனாக பெற அரசு சமர்ப்பித்த திட்ட முன்மொழிவு, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. தற்போது அந்த தொகையை சிறப்பு மானியமாக விடுவிக்க மத்திய அரசிடம் கோரப்படும்.

Similar News

News April 2, 2025

கார்கள் நேருக்கு நேர் மோதல் – குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்

image

வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜகுருநாதன் இவர் நேற்று வேகனார் காரில், கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார். நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் கார் சென்ற போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற டவேரா கார் அதிவேகமாக வந்த நிலையில், முன்னாள் சென்ற பைக்கின் மீதும், எதிரே வந்த வேகனார் கார் மீதும் நேருக்கு நேர் மோதியது. இதில் குழந்தைகள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

News April 2, 2025

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

image

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் போலீசார் மேற்கொண்டு ஆய்வின் போது பாகூர் பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் நேற்று புதுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

News April 2, 2025

புதுச்சேரியில் 15 மதுக்கடைகளுக்கு சீல்

image

புதுச்சேரியில் மதுக்கடை உரிமத்தைப் புதுப்பிக்காதவர்களுக்கு கலால்துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எச்சரிக்கைக்குப் பிறகும் மதுக் கடைகளின் உரிமத்தைப் புதுப்பிக்காத கடைகளுக்கு கலால்துறை வட்டாட்சியர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான அதிகாரிகள் முதலியார்பேட்டை, சின்னக்காலாப்பட்டு, எல்லைப்பிள்ளை சாவடி, பாகூர் உள்ளிட்ட இடங்களில் 15 மதுக்கடைகளுக்கு நேற்று சீல் வைத்தனர்.

error: Content is protected !!