News August 3, 2024

மத்திய அமைச்சரிடம் மனு அளித்த கடலூர் எம்.பி.

image

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் விஷ்ணு பிரசாத், இன்று (ஆகஸ்ட் 3) காலை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை நேரில் சந்தித்தார். அப்போது அவர், நெய்வேலியில் உள்ள விமான நிலையத்தை UDAN திட்டத்தின் கீழ் விரைவில் மேம்படுத்தி பொதுமக்களுக்கான விமான சேவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை மத்திய அமைச்சரிடம் வழங்கினார்.

Similar News

News November 14, 2025

கடலூர்: கல்வி உதவித்தொகை வேண்டுமா?

image

கடலூர் மாவட்டம் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்துள்ளார். இதற்கு <>https://scholarships.gov.in<<>> என்ற இணையதளத்தின் மூலம் வருகிற நவ.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

கடலூர்: இளம் பெண் தற்கொலை!

image

விருத்தாசலத்தை அடுத்த ஊத்தாங்கால் வீரமணி என்பவரின் மனைவி ஸ்ரீ பாரதி (29). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீ பாரதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஊ.மங்கலம் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

News November 14, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கல் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!