News March 26, 2025
மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த மயிலாடுதுறை எம்பி

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை இன்று நேரில் சந்தித்து மயிலாடுதுறை தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார். திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வழியாக தாம்பரம் வரையிலான இன்டர்சிட்டி ரயிலை வாரத்தில் எல்லா நாளும் இயக்க வேண்டும், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.
Similar News
News October 18, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் நேற்று(அக்.17) இரவு 11 மணி முதல், இன்று(அக்.18) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 17, 2025
மயிலாடுதுறை: விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாசற்ற தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வழங்கினார். உடன் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
News October 17, 2025
மயிலாடுதுறை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா ?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <