News June 27, 2024
மத்திய அமைச்சரிடம் எம்.பி கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலைய பணிகளை விரைந்து துவங்கிட வேண்டும், மலேசியா, பினாங்கு மற்றும் சவுதி அரேபியா, ரியாத்திலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.
Similar News
News October 21, 2025
ராமநாதபுரம்: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

ராமநாதபுரம் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 21, 2025
ராமநாதபுரம்: படகில் பயங்கரவாதி ஊடுருவலா?

மண்டபம் கடற்கரையில் இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த பைபர் கிளாஸ் படகு ஒதுங்கியது. இப்படகை கைப்பற்றி மண்டபம் மரைன் போலீசார் விசாரிக்கின்றனர். இப்படகில் மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவர் ஊடுருவி இருப்பதாகவும் அவர் இலங்கையில் குற்ற பின்னணி உள்ளவரா அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவரா என்ற விவரம் தெரியாமலும் போலீசார் தவிக்கின்றனர். சம்பவம் நடந்து 7 நாளாகியும் இதுவரை மர்ம ஆசாமியை பிடிக்க முடியவில்லை.
News October 20, 2025
ராமநாதபுரத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.