News April 11, 2025
மது போதையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொம்மேடு செல்லும் பாதையில், வடக்கு காலனி தெருவைச் சேர்ந்த பிரேம்குமார்(23) என்பவர் 2½ அடி நீளமுள்ள கையில் கத்தியுடன் மது போதையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் சுற்றித்திரிந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் பிரேம்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
அரியலூர்: வழக்கில் இருந்து MLA விடுதலை

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டித்து, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது. அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த வழக்கு நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், இன்று அந்த வழக்கில் இருந்து அரியலூர் MLA சின்னப்பா உட்பட முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்களை மாவட்ட முதன்மை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
News November 26, 2025
JUST IN அரியலூர்: மிக கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 26, 2025
அரியலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நவம்பர் – 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28.11.2025ம் தேதி காலை 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


