News April 11, 2025
மது போதையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொம்மேடு செல்லும் பாதையில், வடக்கு காலனி தெருவைச் சேர்ந்த பிரேம்குமார்(23) என்பவர் 2½ அடி நீளமுள்ள கையில் கத்தியுடன் மது போதையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் சுற்றித்திரிந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் பிரேம்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 14, 2025
அரியலூர் ஆட்சியர் அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில், டிசம்பர் 17-26 வரை 7 நாட்கள் ஆட்சிமொழிச் சட்ட வாரம் காலை 10-12.30மணி வரை கொண்டாடப்பட உள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வாரத்தின் இறுதி நாளான டிச.26 அன்று பொதுமக்கள் ஆட்சிமொழிச் சட்டத்தை அறியும் வகையில் விளம்பர பதாகைகள் ஏந்தி அரசுப் பணியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News December 14, 2025
அரியலூர்: நாளையே கடைசி நாள்

சமுதாய நல்லிணக்கத்திற்காக செயலாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் குடியரசு தினத்தன்று ”கபீர் புரஸ்கார்” விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்நிலையில் 2026-ம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, நாளைக்குள் (டிச.15) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News December 14, 2025
அரியலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


