News April 8, 2025
மது பாட்டில்களை திருடி ஆன்லைனில் விற்றவர்கள் கைது

தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்று ஆன்லைனில் விற்பனை செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கடையின் சுவற்றில் துளையிட்டு மதுபானங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தேன்கனிக்கோட்டை போலீசார், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சாப்ரானப்பள் சேர்ந்த சபரி (25), தீனா(24), ஹரிஸ்(33), நாகராஜ்(24) ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News December 1, 2025
கிருஷ்ணகிரி: கல்குவாரியில் கஞ்சா செடி – போலீஸ் விசாரணை!

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கலர்பதி என்ற கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு கல் குவாரியில் சுமார் 10 அடி உயரம் கஞ்சா செடியை அடையாளம் தெரியாத நபர்கள் வளர்த்துள்ளனர். இதனை அறிந்த மத்தூர் காவல் ஆய்வாளர் பத்மா, இன்று (டிச.01) மதியம், கல் குவாரியை சோதனை செய்தபோது கஞ்சா செடி இருந்தது, அறிந்து அதனை பிடுங்கி காவல் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர். பின் குவாரி உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர்.
News December 1, 2025
கிருஷ்ணகிரியில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக, இன்று (டிச.01) உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் & பொதுமக்கள் முன்னிலையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் எச்ஐவி /எய்ட்ஸ் விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
News December 1, 2025
கிருஷ்ணகிரி: ரூ.7.38 லட்சம் குட்கா கடத்தல் 3 பேர் கைது!

ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் போலீசார்,ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் நேற்று (நவ.30) சோதனை செய்தனர். பின், அவ்வழியாக வந்த ஈகோ காரை நிறுத்தி சோதனை செய்தபோது, ரூ.1.12 லட்சம் மதிப்புள்ள, 125 கிலோ புகையிலை பொருட்கள் & ரூ.1,650 மதிப்புள்ள கர்நாடகா மதுபானங்களை, காஞ்சிபுரத்திற்கு கடத்தியது தெரிந்தது. காரை ஓட்டிச்சென்ற, ஜெயபிரசாந்த் (32) என்பவரை போலீசார் கைது செய்து. காருடன் மது,புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


