News April 8, 2025

மது பாட்டில்களை திருடி ஆன்லைனில் விற்றவர்கள் கைது

image

தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்று ஆன்லைனில் விற்பனை செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கடையின் சுவற்றில் துளையிட்டு மதுபானங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தேன்கனிக்கோட்டை போலீசார், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சாப்ரானப்பள் சேர்ந்த சபரி (25), தீனா(24), ஹரிஸ்(33), நாகராஜ்(24) ஆகியோரை கைது செய்தனர்.

Similar News

News November 16, 2025

கிருஷ்ணகிரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

ஓசூர்: அடுத்தடுத்து திருட்டு; பலே கில்லாடி கைது!

image

ஓசூர், மூக்கண்ட பள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (28) & அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர் அகிலன் (29) இவர்கள் இருவரும் தங்களது பைக்குகளை தங்களது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில், பைக் திருடு போனது. இதுகுறித்து இவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இதுகுறித்து விசாரித்த போலீசார் திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பகுதியை சேர்ந்த அன்பழகனை கைது செய்தனர்.

News November 16, 2025

கிருஷ்ணகிரி: தவறி விழுந்த விவசாயி பலி!

image

கிருஷ்ணகிரி மவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (38) விவசாயி. நேற்று முன்தினம் காலை அவர் பண்ணந்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பில் தேங்காய் பறித்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவம்நனையினுள் அனுமதித்தனர்.

error: Content is protected !!