News March 26, 2025
மதுரை: விலங்கு பட பாணியில் பயங்கரம்

மதுரை பேரையூர் அருகே பாப்பையாபுரம் கிராம கண்மாயில் இன்று சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக பேரையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சடலத்தை காணவில்லை. இதனால் பேரையூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தைத் தேடி வருகின்றனர். விலங்கு பட பாணியில் சடலம் தொலைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 27, 2025
மதுரை: சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு போக்சோ

திருப்பரங்குன்றம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் கார்த்திக் (27). இவர் 17 வயது சிறுமியை சோழவந்தான் கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதில் சிறுமி 5 மாத கர்ப்பமானார். இதையறிந்த திருப்பரங்குன்றம் மகளிர் ஊர் நல அலுவலர் பத்மா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கார்த்திக் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
News November 27, 2025
மதுரை: கணவர் அடித்தால் CALL பண்ணுங்க!

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வேலைத்தளங்களில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை நடந்தால் பெண்கள் உடனடியாக 181 உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்க 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 27, 2025
மதுரையில் மூச்சுத் திணறி இளம்பெண் பலி.!

மதுரை தெற்குவாசல் காஜா தெருவை சேர்ந்தவர்கருப்பசாமி மனைவி காவியா (20). இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


