News March 26, 2025
மதுரை: விலங்கு பட பாணியில் பயங்கரம்

மதுரை பேரையூர் அருகே பாப்பையாபுரம் கிராம கண்மாயில் இன்று சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக பேரையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சடலத்தை காணவில்லை. இதனால் பேரையூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தைத் தேடி வருகின்றனர். விலங்கு பட பாணியில் சடலம் தொலைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 23, 2025
மதுரை: அதிகமா கரண்ட் பில் வருதா? இத பண்ணுங்க

மதுரை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News October 23, 2025
மதுரை: குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு

மதுரை மக்களே, அக்.1 முதல் 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு ஆதாரில் கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை; இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப் போன்ற அரசு உதவிகளை பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. உடனே UPDATE பண்ணுங்க; இந்த தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க
News October 23, 2025
மதுரை அருகே 8 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கரட்டுப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கருப்பட்டி பிரிவு அருகே கரூர், வெங்கமேட்டை சேர்ந்த தங்கவேல் மகன் சதீஷ்குமார் 28, சந்தேகத்திற்கிடமான வகையில் காருடன் நின்றிருந்தார். அவரிடம் விசாரித்ததில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் மேல் விசாரணை நடத்துகின்றனர்.