News March 5, 2025

மதுரை விமான சேவை குறித்து எம்.பி முக்கிய ஆலோசனை

image

மதுரை – சிங்கப்பூர் விமான சேவையை ரத்து செய்யும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்பதையும், மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லி, கோலாலம்பூர் போன்ற முக்கிய நாடுகளுக்கு விமான சேவைகள் வழங்கும் வாய்ப்புகள் பற்றியும் எம்.பி.மாணிக்கம் தாகூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை நிர்வாக அதிகாரி அலோக் சிங்கிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பல்வேறு விமான சேவை குறித்து விவாதிக்கப்பட்டது.

Similar News

News December 4, 2025

BREAKING: மதுரை காவல் ஆணையர் ஆஜராக உத்தரவு.!

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் பத்து நிமிடத்தில் காணொளி மூலம் ஆஜராக நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்ற காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டும், பாதுகாப்பு வழங்காதது ஏன் என விளக்கம் தர உத்தரவிடபட்டுள்ளது.

News December 4, 2025

JUST IN திருப்பரங்குன்றம் அவமதிப்பு வழக்கு விசாரணை!

image

திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரத்தில், உயர் நீதிமன்ற அமர்வில் அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழக்கை விசாரித்து வருகிறார். தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு பாதிக்கப்படவில்லை என்றும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

News December 4, 2025

BIG BREAKING திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு.!

image

திருப்பரங்குன்றம் தீப வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கேராமச்சந்திரன் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்ய இரு நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்ததோடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!