News April 28, 2025
மதுரை ரயில்வேயில் உடனடி வேலை

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
Similar News
News January 10, 2026
மதுரையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக இன்று ஜன.10 அல்லது நாளை ஜன. 11 முதல் கோரிப்பாளையம் சாலையை மீனாட்சி கல்லூரி சந்திப்பில் உள்ள பாலத்துடன் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக மீனாட்சி கல்லூரி நோக்கி செல்லும் வாகனங்கள் இடது புற ம் திரும்பி சர்வீஸ் சாலை பாலம் வழியாக ஏவி மேம்பாலம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
News January 10, 2026
மதுரை: இனி எல்லா CERTIFICATE-ம் உங்க WhatsAPP-ல்

மதுரை மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இதில் தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.
News January 10, 2026
மதுரையில் சோகம்…… MBA பட்டதாரி தற்கொலை

வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி சேர்ந்தவர் சதீஷ்(32). எம்பிஏ படித்த இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காளீஸ்வரி பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்று இருந்தார். சதீஷுக்கு நுரையீரல் கேன்சர் இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் தொடர்ந்து வலி இருந்து வந்துள்ளது. இதனால் வீட்டில் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். மா.சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


