News April 28, 2025
மதுரை ரயில்வேயில் உடனடி வேலை

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
Similar News
News December 23, 2025
மதுரை: லாரி பின் சக்கரத்தில் சிக்கி கொடூர பலி

கருங்காலக்குடி அருகே கச்சிராயன்பட்டியை சேர்ந்தவர் வீரணன்(70). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு மேலூர் மதுரை நான்கு வழிச்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்த போது அம்பலகாரன்பட்டி பஸ் ஸ்டாப் எதிரே, பின்னால் வந்த லாரி மோதியது. இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
News December 22, 2025
மதுரை: பிரேக் அடித்த லாரி; டூவிலரில் வந்த இளைஞர் பலி

வாடிப்பட்டி நீரேத்தானை சேர்ந்த தேசிகன்(19). கன்னியாகுமரியை சேர்ந்த சானியா(19) என்பவரை டூவீலரில் அழைத்து கொண்டு மதுரை – திண்டுக்கல் சாலையில், டூவீலரில் நேற்று சென்றார். அப்போது மேம்பாலத்தில் முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் போட, பின்னால் சென்று டூவீலர் அதில் மோதியது. இதில் தேசிகன் சம்பவ இடத்திலே பலியாக, சானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 22, 2025
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்ற கோரிய விவகாரம் நிலுவையில் உள்ள நிலையில் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல கடந்த 20 நாட்களாக போலீசார் அனுமதி மறுத்த நிலையில் இன்று (டிச.22) மாவட்ட நிர்வாகம் தரிசனத்திற்கு செல்ல அனுமதித்துள்ளது. காலை 6 முதல் மாலை 6 மணி வரை கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியும், வீடியோ, புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


