News August 9, 2024

மதுரை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுவதாக ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். பதிவு பெற்ற குழுக்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 17, 2025

மதுரை: கம்மியான விலையில் பைக், கார் வேண்டுமா.!

image

மதுரை மாவட்ட காவல் துறையால் கழிவு செய்­யப்­பட்ட 14 வாகனங்­கள் (8 நான்கு சக்­கர வாகனம், 6 டூவீலர்கள்) பொது ஏலம் விடப்பட உள்­ளன. ஏலம் வருகின்ற நவ.18 காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆயு­த படை மைதானத்­தில் நடை­பெ­ற­ உள்ளது. பங்­கேற்க விரும்­பும் நபர்­கள் நவ.18 காலை 8.00 மணிக்கு தங்­க­ளது ஆதார் அட் டை­யு­டன் ரூ. 5,000/ முன் பணம் செலுத்தி பதிவு செய்யலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

மதுரை: டூவீலரில் சென்ற பெண் கீழே விழுந்து பலி

image

திருமங்­க­லம் அருகே உச்­சப்­பட்டியை சேர்ந்­தவர் கண்­ணன் அவரது மனைவி செல்வி(41). இவர்­கள் இருவரும் பைக்கில் கப்­ப­லூர் காம­ரா­ஜர் கல்­லூரி அருகே நேற்று சென்­ற­ போது, பின்­னால் அமர்ந்திருந்த செல்வி திடீ­ரென தவறி
விழுந்­தார். அடிபட்ட அவர் அரசு மருத்­துவம­னை­யில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரி­ழந்­தார். திருமங்­க­லம் டவுன் போலீ­சார் வழக்­கு பதிவு செய்து விசா­ரிக்கின்றனர்.

News November 17, 2025

மதுரையில் இன்று, நாளை இங்கெல்லாம் மின்தடை.!

image

மதுரை, மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சோழவந்தான் பகுதியிலும் நாளை மேலூர், கொட்டம்பட்டி, பேரையூர், சின்னகட்டளை, எழுமலை, உசிலம்பட்டி, தும்மைகுண்டு, திருவாதவூர், நாட்டார்மங்கலம், , நரசிங்கம்பட்டி, A.வள்ளலாளபட்டி,மேலவளவு, தனியாமங்கலம், வாடிப்பட்டி, நரசிங்கம்பட்டி மற்றும் இதன் சுற்றுபகுதிகளில் மின்தடை ஏற்படும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!