News April 20, 2025
மதுரை மக்களே எச்சரிக்கை

மதுரையில் நாளை ஏப்.21 முதல் ஏப்.26ஆம் தேதி வரை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெயில் கொளுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறுவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குளிர்ச்சியான பானம் மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
மதுரை: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் தான் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News November 22, 2025
மதுரை: சிறுமி தற்கொலை முயற்சி… இளைஞருக்கு வலை

அலங்காநல்லுார் அருகே அ.புதுப்பட்டி பச்சையப்பன் மகன் சங்கிலிக்கருப்பு 24. இவர் அப்பகுதி ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு காதல் தொல்லை தந்து வந்துள்ளார். ஏற்க மறுத்த சிறுமியின் வீட்டு கதவு மீது கற்களை எறிந்து மிரட்டினார். இதனால் பயந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றார். சிறுமியை காப்பாற்றிய பெற்றோர் சமயநல்லுார் மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்ததை தொடர்ந்து வாலிபர் தலைமறைவானார். போலீசார் தேடுகின்றனர்.
News November 22, 2025
மதுரை: சிறுமிக்கு பாலியல் தொல்லை; பாய்ந்த போக்சோ!

மதுரை மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியில் வேல்முருகன் என்பவர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். வேல்முருகனின் மகன் கண்ணன் 25 சிறுமியிடம் அத்துமீறி நடந்ததுடன், அடிக்கடி பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரில் கண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருமங்கலம் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.


