News April 13, 2024
மதுரை: பிளஸ் 2 மாணவன் தற்கொலை

மதுரை அருகே நிலையூரை சேர்ந்தவர் செந்தில் மகன் ராகுல்(18). இவர் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இவரது தந்தை இறந்து விட்டதால், தாய் ராகுலை வேலைக்கு செல்லும்படி கூறியுள்ளார். இதனால் மனம் வெறுத்த ராகுல் அப்பகுதியில் உள்ள சூரக்குளம் கண்மாய் பகுதியில் விஷம் குடித்து இன்று தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 1, 2025
JUST IN: திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற அனுமதி.!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை திருநாளில் (டிச.3) தீபம் ஏற்றலாம் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உச்சி பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் எழுமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார். மலை உச்சியில் ஆய்வு செய்த நீதிபதி ஜி.ஆர்,சுவாமிநாதன், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
News December 1, 2025
மதுரை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

மதுரை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News December 1, 2025
மதுரையில் பரவும் டெங்கு… மக்களே உஷார்

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் சிகிச்சை பெறுகின்றனர். சிந்தாமணி பகுதியில் இரண்டு வயது பெண் குழந்தை உட்பட கிராமப்புறங்களிலிருந்து ஒரு பெண், இரு ஆண்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தை தனியார் மருத்துவமனையிலும் மற்றவர்கள் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் பிரத்யேக காய்ச்சல் வார்டு தயாராக உள்ளது.


