News April 23, 2025

மதுரை: நர்ஸிங் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழக ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் நர்ஸிங் அசிஸ்டன்ட் பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 18 முதல் 38 வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து ஏப்.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு Share செய்யவும்.

Similar News

News November 13, 2025

மதுரை: சிலிண்டர் ஏற்றி வந்த வேன் மோதி வாலிபர் பலி.!

image

ஆட்டுக்குளம் ஊராட்சி உலகநாதபுரத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் வல்லரசு(26). இவர் நேற்றிரவு மேலூர் சிவகங்கை சாலையில் டூவீலரில் சென்ற போது பெருமாள்பட்டி அருகே எதிரே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த வேன் மீது மோதினார். இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ் விபத்து குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 13, 2025

மதுரை: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை

image

மதுரை மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தகுதிகேற்ப சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 13, 2025

மதுரை: இலவச தையல் இயந்திரம் பெறலாம்

image

மதுரை மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள்கள் பலரும் ஒன்றிய, மாநில அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்து சான்று பெற்றுள்ளனர். அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தையல் இயந்திரம் பெற விரும்புவோர், நவ. 20ஆம் தேதிக்குள் மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் நேரில் வந்து தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!