News April 13, 2025
மதுரை: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE!
Similar News
News April 18, 2025
மதுரை : நியோமேக்ஸின் ரூ.600 கோடி சொத்துக்கள் முடக்கம்

மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது. மதுரை பொருளாதார குற்றப்பிரிவு பதிவு செய்த FIR அடிப்படையில் விசாரணையை துவங்கிய அமலாக்கத்துறை இன்று, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நியோமேக்ஸின் சொத்துக்களை முடக்கியது.சென்னை மண்டல அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் உள்ள அசையும்-அசையா சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.
News April 18, 2025
மதுரையில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 18) 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News April 18, 2025
மதுரை மாவட்ட உதவி எண்கள் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0452 –2546100
▶️காவல் -100
▶️விபத்து -108
▶️தீ தடுப்பு – 101
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️மின்தடை உதவி எண் – 1912
▶️பேரிடர் கால உதவிக்கு – 1077
உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்தவும். அபத்தில் உள்ளவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்