News April 24, 2025

மதுரை : கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?

image

உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயிலின்  உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்பட்டது. கோவிலில் உள்ள உண்டியல் திறக்கப்பட்டு  உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதில் 12 லட்சத்து 62 ஆயிரத்து 469 ரூபாய் ரூபாய் பணமும், 50 கிராம் தங்கமும், 74 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றது என கோவில் நிர்வாகம் தகவல்.

Similar News

News October 16, 2025

மதுரை மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..? இத பண்ணுங்க

image

மதுரை மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!.

News October 16, 2025

மதுரையில் கூலி படையை சேர்ந்த 6 பேருக்கு ‘குண்டாஸ்’

image

மதுரை பார்க் டவுனை சேர்ந்தவர் ராஜ்குமார், கல்லாணை தொழிலில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த மாதம் கூலிப்படையை ஏவி ராஜ்குமாரை கல்லாணை கொலை செய்தார். இது தொடர்பாக கல்லாணை, அவரது மகன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதான நிலையில், கூட்டாளிகளான மகபூப்பாளையம் ஜெயராஜ் 41, மாடக்குளம் முரளி 50, சிக்கந்தர் சாவடி லாரன்ஸ் 51, ஆகியோரும் இச்சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

News October 16, 2025

மதுரையில் கொத்தனார் காயங்களுடன் மர்மச்சாவு

image

மதுரை கோச்சடை பகுதி ஜெயபாண்டி 49 கொத்தனார் இவரது மகன் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த ஜெயபாண்டி வீட்டிலிருந்து வெளியேறி நாகமலை புதுக்கோட்டையில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த நிலையில் கோச்சடை பஸ் ஸ்டாப் முன்பாக நேற்று முகத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மனைவி சிவகாமி அளித்த புகாரின் பேரில் எஸ் எஸ் காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!