News May 10, 2024
மதுரை: கூலித் தொழிலாளியின் மகள் சாதனை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. மதுரை உசிலம்பட்டி அருகே வசிக்கும் கூலி தொழிலாளியின் மகளான ஜெ.சுஸ்யா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார். கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை செய்துள்ளார்.
Similar News
News December 15, 2025
மதுரை: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

மதுரை மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் இங்கு <
News December 15, 2025
மதுரை அருகே திமுக நிகழ்ச்சியில் மூக்குடைப்பு

சோழவந்தான் அருகே பொம்பன்பட்டியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த ‘டிபன் கேரியர்’ வழங்கும் நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு வாங்க முயற்சித்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் பொம்மன்பட்டியைச் சேர்ந்த ஸ்டீபன் 42, என்பவரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 15, 2025
மதுரையில் வங்கி தேர்வு இலவச பயிற்சி

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே நேஷனல் இன்ஸ்டியூட் பயிற்சி மையத்தின் 21 ஆண்டை முன்னிட்டு கல்லூரியில் இளநிலை முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் 70 மாணவர்களுக்கு இலவச வங்கி தேர்வு பயிற்சி நடைபெறவுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு டிச.21 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நேஷனல் இன்ஸ்டியூட்டில் நடைபெறும். முன்பதிவு செய்ய 95666 59104 வாட்ஸ் ஆப்பிள் முன்பதிவு செய்யலாம் முன்பதிவு செய்ய டிச.20 கடைசி நாள்.


