News May 10, 2024
மதுரை: கூலித் தொழிலாளியின் மகள் சாதனை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. மதுரை உசிலம்பட்டி அருகே வசிக்கும் கூலி தொழிலாளியின் மகளான ஜெ.சுஸ்யா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார். கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை செய்துள்ளார்.
Similar News
News December 12, 2025
மீனாட்சி அம்மன் கோவிலில் நடை திறப்பு மாற்றம்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகின்ற டிசம்பர் 16ம் தேதி முதல் ஜனவரி 15 2026 வரை நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்கழி திருப்பள்ளியெழுச்சியை முன்னிட்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படும் பிறகு 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 12, 2025
மதுரை: சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் பரிதாப பலி

மதுரை உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் செல்வபாண்டி, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில், நேற்று (டிச. 11) மாலை மைத்துனர் அருண்குமாருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உசிலம்பட்டி போலீசார் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
News December 12, 2025
மதுரை: ரேஷன் கார்டு இருக்கா…. முக்கிய அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறித்த மக்கள் குறைதீர் முகாம் நாளை (13.12.25) நடக்கிறது. குடிமை பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில், நாளை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும்.இம்முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர்,முகவரி திருத்தம், போன்றவை குறித்து மனுக்கள் அளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.


