News May 16, 2024
மதுரை: கணினி மென்பொருளை திருடிய ஊழியர்

மதுரை பழங்காநத்தம் நேரு நகரை சோ்ந்த தம்பதி மோகன்ராஜ்-பிரகல்யா. இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக மின்னணு வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் மையம் நடத்தி வருகின்றனர். இங்கு பணியாற்றும் சிவா, கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறுவனத்தின் சிசிடிவி கேமராக்களை ‘ஹேக்’ செய்து அங்கிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கணினி மென்பொருளை திருடி சென்றுள்ளார். மோகன்ராஜ் அளித்த புகாரில் சிவா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

மதுரை மாவட்டத்தில் பல்வேறு மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை 9ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அச்சம்பத்து, சமயநல்லூர், வளையங்குளம், எழுமலை, மங்கல்ரவ், டி கிருஷ்ணபுரம், டி ராமநாதபுரம், சின்னகட்டளை, பேரையூர், சாப்டூர், குடிசேரி, வண்டபுலி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் . நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவவும்.
News December 8, 2025
மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (07.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News December 7, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


