News April 15, 2024

மதுரை எய்ம்ஸ் வடமாநில மாணவர்கள் போராட்டம்

image

மதுரை எய்ம்ஸில் சேர்ந்து பயின்று வரும் இந்தி‌ பேசும் மாணவர்கள், தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியதாக வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி போராடிய அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் ” என்று கூறியிருக்கின்றனர்.

Similar News

News October 17, 2025

மதுரையில் சோகம்… தீபாவளிக்கு வந்தவர் தற்கொலை

image

மதுரை பழங்காநத்தம் ஆர்சி தெரு கருப்பசாமி மகன் அசோக்குமார் 26 தஞ்சாவூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமான நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி மனைவிக்கு ஜவுளி எடுக்க அசோக் குமார் மதுரை வந்தார். இங்கே அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் அசோக் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 17, 2025

மதுரை: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

image

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 17, 2025

மதுரை மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் தர்ணா

image

மதுரை மாநகராட்சி சிறப்பு மாமன்ற கூட்டம் மதுரை மாநகராட்சி துணை மேயர் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் கூட்டம் முடிந்தும் வெளியேறாமல்,45 வது வார்டு கவுன்சிலர் சண்முகவள்ளி தனது வார்டில் கழிவுநீர் அதிகமாக செல்வதால் பலமுறை மாநகராட்சி இடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மின்விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையிலிலும் கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!