News April 15, 2024
மதுரை எய்ம்ஸ் வடமாநில மாணவர்கள் போராட்டம்

மதுரை எய்ம்ஸில் சேர்ந்து பயின்று வரும் இந்தி பேசும் மாணவர்கள், தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியதாக வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி போராடிய அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் ” என்று கூறியிருக்கின்றனர்.
Similar News
News December 4, 2025
மதுரை: 15 வயது சிறுமி கர்ப்பம்

கீரைத்துரையை சேர்ந்தவர் மலைச்சாமி மகன் சேதுபதி(26). இவர் 15 வயது சிறுமியை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதில் சிறுமி 7 மாத கர்ப்பமானார். மதுரை குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் அனிதா இது குறித்து போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சேதுபதியை நேற்று கைது செய்தனர்.
News December 4, 2025
மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

மதுரை மாவட்டத்தில் நாளை (டிச.4) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பைக்ரா, பசுமலை, விளாச்சேரி மற்றும் திருநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலாஜி நகர், ஹார்விபட்டி, மகாலட்சுமி காலனி, முனியாண்டிபுரம், குறிஞ்சி நகர், அருள் நகர், நேதாஜி நகர், ராம்நகர், திருவள்ளுவர் நகர், திருப்பரங்குன்றம் ரோடு, யோகியார் நகர், தண்டல்காரன்பட்டி, மூட்டா காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது SHARE IT.!
News December 3, 2025
மதுரை வெள்ளத்தின் நீங்கா நினைவுகள்..!

1993ம் ஆண்டு மதுரையில் ஒரே நாளில் 520 மி.மீ வரலாறு காணாத மழை கொட்டியது. செல்லூர் கண்மாய் இரவோடு இரவாக முன்னறிவிப்பின்றி உடைக்கப்பட்டு கோரிப்பாளையம், நரிமேடு, பீபீ குளம், தமுக்கம் போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. வைகை நதியும் நிரம்பி வழிந்தது. டிச.1 முதல் 4 வரை ( இதே நாளில் ) மதுரை நகரம் ஸ்தம்பித்தது. மக்கள் உடைமைகளை இழந்து தவித்தனர். இன்றும் பலருக்கு இது நீங்கா வடுவாக மனதில் பதிந்துள்ளது.


