News December 5, 2024
மதுரை இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்

மதுரை மாவட்ட இரவு ரோந்து பணி காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியீடு. பேரையூர், ஊமச்சிகுளம், திருமங்கலம், மேலூர், சமயநல்லூர், உசிலம்பட்டி போன்ற மதுரை மாநகர பகுதிகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டன.
Similar News
News December 4, 2025
BIG BREAKING திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு.!

திருப்பரங்குன்றம் தீப வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கேராமச்சந்திரன் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்ய இரு நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்ததோடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் என தெரிவித்துள்ளனர்.
News December 4, 2025
மதுரை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

மதுரை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0452-2531159 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News December 4, 2025
மதுரை: மயங்கி கிடந்தவரை மீட்டவர் விபத்தில் பரிதாப பலி

புதுக்கோட்டை அறந்தாங்கி சேர்ந்த லோகேஸ்வரன் 28. மெடிக்கல் கம்பெனி விற்பனை பிரதிநிதி. தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவருடன் நத்தம் நெடுஞ்சாலை கடவூர் அழகர்கோவில் மலை ரோட்டில் காரில் சென்ற போது, சாலை ஓரத்தில் அடிபட்டு கிடந்தவரை மீட்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தார். பின்னர் சாலையைக் கடந்த போது திடீர்னு வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே லோகேஸ்வரன் உயிரிழந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


