News May 15, 2024
மதுரை: அழகர்கோவில் மலைப்பாதை மூடல்

மதுரை, அழகர்கோவில் மலைப்பாதை இன்று மூடப்பட்டது. அழகர் கோவில் அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் சாலையில் பாலப்பணிகள் நடைபெறுவதால் இன்று ஒரு நாள் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. முன்னறிவிப்பு இன்றி, அழகர்கோவில் மலை சாலை மூடப்பட்டதால், மலை மீது உள்ள பழமுதிர்சோலை, நூபுர கங்கை தீர்த்தம் போன்றவற்றிற்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதியடைந்தனர்.
Similar News
News December 6, 2025
மதுரை இளைஞர் ஏடிஎம்மில் நூதன திருட்டு

திருப்புவனத்தை சேர்ந்த மஞ்சுளா (53) மாட்டுத்தாவணியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற போது அவருக்கு உதவி செய்வது போல் வாலிபர் ஒருவர் நடித்துள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த போது அவரின் செல்போனில் ரூ 28,500 பணம் எடுத்ததாக மெசேஜ் வந்தது. மாட்டுத்தாவணி போலீசார் சிசிடிவி பதிவை ஆய்வு செய்து வில்லாபுரம் சபரி கிருஷ்ணனை(33) நேற்று கைது செய்து ரூ.8000த்தை பறிமுதல் செய்தனர்.
News December 5, 2025
மதுரை மாநகராட்சி ஊழியர் வலிப்பு ஏற்பட்டு பலி.!

மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த பிளம்பராக இருந்தவர் ராஜா 50. மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் பகுதி கழிவு நீர் கால்வாய் அருகே அவர் நடந்து சென்ற போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 5, 2025
மதுரை அருகே பெண் தற்கொலையில் சந்தேகம்…!

வெள்ளலூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி அன்னக்கிளி(35). முத்துக்குமார் துபாயில் வேலை பார்த்து வருவதால் தனது மகள் முத்துலட்சுமி(10), சிவா(7) மற்றும் மாமியாருடன் அன்னக்கிளி வாசித்து வந்தார். அவர் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த கீழவளவு போலீசார், உயிரிழப்புகான காரணம் குறித்து இன்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


