News April 6, 2025
மதுரை அருகே மாடி வீடே இல்லாத வினோத கிராமம்

மதுரையில் இந்த காலத்திலும் மாடி வீடே இல்லாத அதிசய கிராமம் ஒன்றுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் சேடப்பட்டி அருகே பொன்னையன்பட்டி கிராமத்தில் சுமார் 120 வீடுகள் உள்ளது. ஊர் எல்லையில் காவல் தெய்வமாக திகழும் கருப்பசாமிக்கு கட்டுப்பட்டு கோவிலின் உயரத்தை மீறி கட்டிடம் அமைத்தால் துன்பம் வந்து சேருமோ என்ற அச்சத்தில் பல தலைமுறையாக மாடி வீடே காட்டாமல் உள்ளனர். இது பற்றி தெரியாத நண்பருக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News December 1, 2025
மதுரையில் மூன்று மாத பெண் குழந்தை பலி

மதுரை செல்லூர் கார்த்திக் கலைச்செல்வி தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதலே தாய்ப்பால் இல்லாததால் டாக்டர்களின் ஆலோசனையின் படி குழந்தைக்கு பால் பவுடர் பால் கொடுத்து தூங்க வைத்தனர், பின் குழந்தை பேச்சு மூச்சு இன்றி இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 1, 2025
மதுரை: 10th போதும்., எய்ம்ஸ்-ல் வேலை உறுதி! உடனே APPLY

மதுரை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <
News December 1, 2025
மதுரை: கடன் தொல்லையால் முதியவர் விஷமருந்தி தற்கொலை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த ஜனார்த்தனன்(59) பல்வேறு இடங்களில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் இருந்து வந்தார் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை படுத்தவே மன உளைச்சல் அடைந்த அவர் விஷம் குடித்தார். கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இன்று அங்கு உயிரிழந்தார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


