News August 25, 2024

மதுரை அருகே எஸ்.ஐ மீது பெண் பாலியல் புகார்

image

மேலூரை சேர்ந்த 36 வயது பெண் மதுரை எஸ் பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அதில், நான் ஒரு டெய்லர் கடை நடத்தி வருகிறேன், கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சிறையில் உள்ள எங்களது சங்க தலைவரை ஜாமீன் எடுப்பதற்காக போலீஸ் ஸ்டேஷனில் விவரங்கள் கேட்கும் போது, அதனை சாதகமாக பயன்படுத்தி நேரிலும் செல்போனிலும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் பெண் கொடுத்த புகாரில், எஸ்ஐ மீது விசாரணை நடக்கிறது.

Similar News

News December 4, 2025

மதுரையில் கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

image

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக மதுரையில் 1000-த்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம் .SHARE பண்ணுங்க.

News December 4, 2025

அலங்காநல்லூர் அருகே எலக்ட்ரீசியன் தற்கொலை

image

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வலசை கிராமத்தைச் சேர்ந்த விஜய் பிரபாகரன் 26. எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வினோதா இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனை அடைந்த அவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

News December 4, 2025

மதுரைக்கு வரும் தமிழக முதல்வர்

image

மதுரையில் 7ம் தேதி பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி மாலை மதுரை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் மதுரை வடக்கு, மாநகர், தெற்கு திமுக சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு கொடுக்கப்பட உள்ளதாகவும், அதில் திமுகவின் திரளாக பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் செயலர்கள்: அமைச்சர் மூர்த்தி மாநகர் செயலர் தளபதி எம்எல்ஏ தெற்கு செயலர் மணிமாறன் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!