News August 25, 2024

மதுரை அருகே எஸ்.ஐ மீது பெண் பாலியல் புகார்

image

மேலூரை சேர்ந்த 36 வயது பெண் மதுரை எஸ் பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அதில், நான் ஒரு டெய்லர் கடை நடத்தி வருகிறேன், கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சிறையில் உள்ள எங்களது சங்க தலைவரை ஜாமீன் எடுப்பதற்காக போலீஸ் ஸ்டேஷனில் விவரங்கள் கேட்கும் போது, அதனை சாதகமாக பயன்படுத்தி நேரிலும் செல்போனிலும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் பெண் கொடுத்த புகாரில், எஸ்ஐ மீது விசாரணை நடக்கிறது.

Similar News

News December 5, 2025

மதுரை: டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க.

News December 5, 2025

மதுரை: அரசு பஸ் மோதி துடிதுடித்து வாலிபர் பலி.!

image

தும்பைப்பட்டி அருகே நான்கு வழிச்சாலை ரோட்டோரம் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்ற 35வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் மோத, தலையில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தும்பைப்பட்டி விஏஓ சரவணன் இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்தார். திருச்சி துறையூரை சேர்ந்த பஸ் டிரைவர் சுதாகரை கைது செய்த மேலூர் போலீசார் இறந்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.

News December 5, 2025

மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

image

மதுரையில் நாளை காலை காலை 9 முதல் மதியம் 3 மணி வரை விஸ்வநாதபுரம், மகாத்மாகாந்தி நகர், முல்லைநகர், சிவக்காடு, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, கருமாத்துார், மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையபட்டி,கோவிலாங்குளம், வடபழஞ்சி தென்பழஞ்சி, பல்கலை நகர்.மற்றும் இதன் சுற்று பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!