News September 14, 2024
மதுரை: அரசு ஆரம்பப்பள்ளிக்கு உதவிய தம்பதி

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளிக்கு அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன்- மகிழ்மதி என்ற தம்பதியினர் ரூ.9500 மதிப்பிலான தானியங்கி மின்சார மணியை அன்பளிப்பாக வழங்கி உதவினர். இந்த தம்பதியின் செயலை அப்பகுதி பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வெகுவாக பாராட்டினர்.
Similar News
News January 7, 2026
மதுரையில் தொடங்கியது ஜல்லிக்கட்டு திருவிழா

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் ஜனவரி 16, 17 உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அதற்கான பணிகளுக்கான பந்தக்கால் இன்று நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் மற்றும் அலங்காநல்லூர் பாலமேடு கிராம மக்கள் மற்றும் விழா கமிட்டியினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News January 7, 2026
மதுரை: காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு..

பேரையூர் அருகே கொலவீரன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி கற்பகவல்லி (64). இவரை காணவில்லை என கல்லுப்பட்டி போலீசில் இரு தினங்களுக்கு முன்பு இவரது மகன் முத்து புகார் அளித்துள்ளார். இந்நிலையில் வில்லூர் கண்மாய் எதிரே உள்ள இந்திராணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் கற்பகவல்லி பிணமாக நேற்று முன்தினம் ( ஜன.5 ) மிதந்துள்ளார். உடலை மீட்டு பேரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 7, 2026
மதுரை: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கியாஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. காலாவதியான கியஸ் சிலிண்டர் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 – மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!


