News September 14, 2024

மதுரை: அரசு ஆரம்பப்பள்ளிக்கு உதவிய தம்பதி

image

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளிக்கு அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன்- மகிழ்மதி என்ற தம்பதியினர் ரூ.9500 மதிப்பிலான தானியங்கி மின்சார மணியை அன்பளிப்பாக வழங்கி உதவினர். இந்த தம்பதியின் செயலை அப்பகுதி பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வெகுவாக பாராட்டினர்.

Similar News

News November 24, 2025

மதுரை: 100% SIR நிறைவு – அலுவலர்களுக்கு பாராட்டு

image

இன்று (24.11.2025) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் இ.ஆ.ப., வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை 100% நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.

News November 24, 2025

மதுரை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து Grievance Redressal, சேலம் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

News November 24, 2025

மதுரை அருகே செப்டிக் டேங்கிற்குள் விழுந்த பசு மாடு மீட்பு

image

மேலூர் மதுரை சாலையில், செக்போஸ்ட் அருகே அரசு கலைக் கல்லூரியில் உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த வளாகத்தில், போதிய சுற்று சுவர் இல்லாததால் வெளி நபர்கள் மற்றும் கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்க்குள் பசுமாடு ஒன்று விழுந்தது. தகவல் அறிந்த மேலூர் தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

error: Content is protected !!