News September 14, 2024
மதுரை: அரசு ஆரம்பப்பள்ளிக்கு உதவிய தம்பதி

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளிக்கு அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன்- மகிழ்மதி என்ற தம்பதியினர் ரூ.9500 மதிப்பிலான தானியங்கி மின்சார மணியை அன்பளிப்பாக வழங்கி உதவினர். இந்த தம்பதியின் செயலை அப்பகுதி பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வெகுவாக பாராட்டினர்.
Similar News
News January 1, 2026
மதுரை: கார் ஏறி இறங்கியதில் ஒருவர் பரிதாப பலி

மதுரை பெருங்குடி ரோட்டில் உள்ள சாய் ஓட்டல் அருகே, சாலையோரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுத்திருந்தார். அங்கு நிறுத்தி இருந்த காரை அதன் உரிமையாளர் எடுக்கும் போது, படுத்திருந்தவர் மீது கார் ஏறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். மதிச்சியம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 31, 2025
மதுரை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News December 31, 2025
மதுரை: குடிநீர் பிரச்சனை தீர ஓரே வழி இதுதான்.!

மதுரை மக்களே உங்க பகுதியில் குடிநீர் சரிவர வரவில்லை, கலங்கலாக வருகிறது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லையா? மதுரை மாவட்ட குடிநீர் வழங்கல் கட்டுபாட்டு அதிகாரியிடம் போனில் (0452-2580764) தெரிவிக்கலாம். உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இந்த பயனுள்ள தகவலை உங்க பகுதி மக்களுக்கு உடனே SHARE பண்ணி உதவுங்க.


