News April 23, 2025

மதுரை: அங்கன்வாடியில் வேலை – இன்றே கடைசி

image

மதுரை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 217 பணியாளர், 4 குறு அங்கன்வாடி பணியாளர், 152 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும். Share.

Similar News

News December 4, 2025

BIG BREAKING திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு.!

image

திருப்பரங்குன்றம் தீப வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கேராமச்சந்திரன் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்ய இரு நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்ததோடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் என தெரிவித்துள்ளனர்.

News December 4, 2025

மதுரை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

மதுரை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0452-2531159 அணுகலாம். SHARE பண்ணுங்க.

News December 4, 2025

மதுரை: மயங்கி கிடந்தவரை மீட்டவர் விபத்தில் பரிதாப பலி

image

புதுக்கோட்டை அறந்தாங்கி சேர்ந்த லோகேஸ்வரன் 28. மெடிக்கல் கம்பெனி விற்பனை பிரதிநிதி. தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவருடன் நத்தம் நெடுஞ்சாலை கடவூர் அழகர்கோவில் மலை ரோட்டில் காரில் சென்ற போது, சாலை ஓரத்தில் அடிபட்டு கிடந்தவரை மீட்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தார். பின்னர் சாலையைக் கடந்த போது திடீர்னு வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே லோகேஸ்வரன் உயிரிழந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!