News April 29, 2025
மதுரையில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை மாநகரில் பணியாற்றி வரும் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி மதிச்சியம் இன்ஸ்பெக்டர் வேதவள்ளி மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்திற்கும் மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா அரசு ஆஸ்பத்திரிக்கும் இதுபோல் விருதுநகர் மாவட்ட இன்ஸ்பெக்டர் செல்வி கூடல் புதூருக்கும் இங்கு பணியாற்றிய பாலமுருகன் மதிச்சியத்திற்கும் மாற்றப்பட்டனர்.
Similar News
News November 11, 2025
மதுரை மகளிர் காவல்நிலையம் முற்றுகை

மதுரை வசந்தநகர் அரசு உதவி பெறும் பள்ளி பாலியல் தொந்தரவு வழக்கில், ஆசிரியர் ஜெயராம் மற்றும் உடந்தையாக இருந்த தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை மீது நவம்பர் 5-ல் ‘போக்சோ’ சட்டம் பதியப்பட்டது. கைது செய்யாததால், நேற்று அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News November 11, 2025
மதுரையில் இந்த பகுதிகளிலும் இன்று கரண்ட் கட்

மதுரை மாவட்டம், மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன் சேர்வை நகர், தேவிநகர், கிருஷ்ணா நகர், சபரி நகர், நமசிவாய நகர், ஐஸ்வர்யா நகர், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோயில், சத்தியமூர்த்தி நகர், அருள் நகர், அவர்லேடி பள்ளி, காயத்ரி தெரு, பிரித்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர் மேலும் அவனியாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மற்றும் விமானநிலையம் வரை இன்று மின் தடை.
News November 11, 2025
மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (10.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


