News April 29, 2025
மதுரையில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை மாநகரில் பணியாற்றி வரும் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி மதிச்சியம் இன்ஸ்பெக்டர் வேதவள்ளி மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்திற்கும் மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா அரசு ஆஸ்பத்திரிக்கும் இதுபோல் விருதுநகர் மாவட்ட இன்ஸ்பெக்டர் செல்வி கூடல் புதூருக்கும் இங்கு பணியாற்றிய பாலமுருகன் மதிச்சியத்திற்கும் மாற்றப்பட்டனர்.
Similar News
News September 15, 2025
மதுரை மாநகராட்சியில் அடுத்த ‘பூதம்’ மேலும் ஒரு முறைகேடா?

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு புயல் அடங்குவதற்குள் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்புக்காக பள்ளங்கள் தோண்டி குழாய்ப் பதிக்கும் பணிகளில் மீட்டர் அளவை குறைத்து காண்பித்து மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்திய வகையில், ரூ.பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதுகுறித்தும் வரதராஜ் நிர்வாகம் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News September 15, 2025
மதுரையில் உணவு தங்குமிடத்துடன் 45 நாள் பயிற்சி

மதுரை மஹபூப்பாளையம் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தில் வேளாண் சார்ந்த தொழில் துவங்க இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. வங்கிக்கடன் பெற பயிற்சி அளிக்கப்படுகிறது. 45 நாள் பயிற்சி தங்குமிடம், உணவு இலவசம். விரும்புவோர் இன்று (செப்.,15) சிப்போ அலுவலகத்தில் பதிவு செய்யலாம். விவரங்களுக்கு 78715 55825ல் தொடர்பு கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க தொழில் துவங்க நல்ல வாய்ப்பு
News September 14, 2025
மதுரை மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

மதுரை மாவட்டத்தில் இன்று (14.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.