News April 29, 2025
மதுரையில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை மாநகரில் பணியாற்றி வரும் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி மதிச்சியம் இன்ஸ்பெக்டர் வேதவள்ளி மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்திற்கும் மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா அரசு ஆஸ்பத்திரிக்கும் இதுபோல் விருதுநகர் மாவட்ட இன்ஸ்பெக்டர் செல்வி கூடல் புதூருக்கும் இங்கு பணியாற்றிய பாலமுருகன் மதிச்சியத்திற்கும் மாற்றப்பட்டனர்.
Similar News
News November 15, 2025
திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் கிடந்த சடலம்

திருமங்கலம் மறவன் குளம் ரயில்வே கேட் அருகே நேற்று காலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். உடல் இரண்டு தண்டவாளங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கிடந்ததால் அவர் ரயில் மோதி இருந்தாரா, அல்லது ரயில் படிக்கட்டில் பயணம் செய்த போது தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து உடலை கைப்பற்றி மதுரை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 15, 2025
மதுரையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை

மதுரை மாநகர் பகுதியான கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் 200 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட மேம்பால கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால் (நவ.12) 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஒரு வார காலத்திற்கு இரவில் மட்டும் பணிகள் நடைபெறுவதால், அந்த பகுதியில் எந்த ஒரு வாகனத்திற்கு அனுமதி இல்லை எனவும் பகலில் வாகனங்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
மதுரை: டிராக்டர் மோதி டூவீலரில் சென்றவர் பலி.!

திருமங்கலத்தைச் சேர்ந்த தவமணி (59), என்பவர் டூவீலரில் மங்கல்ரேவு அத்திப்பட்டி சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். ஜம்பலாபுரம் அருகே பேரையூரைச் சேர்ந்த இளையராஜா (34) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் இவர் மீது மோதியது. படுகாயத்துடன் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தவமணி இன்று உயிரிழந்தார். டிராக்டர் டிரைவரை கைது செய்து பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


