News October 23, 2024
மதுரையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடை மூடல்

27.10.2024 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர் நினைவுதினத்தை முன்னிட்டும் அக்.29 & 30 ஆகிய நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியை முன்னிட்டும், மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு 27.10.2014 (மாலை 07.00 மணி வரை மட்டும்) மற்றும் 29.10.2024, 30.10.2024 மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு.
Similar News
News November 6, 2025
மதுரையில் நாளை மின்தடை

மதுரையில் நாளை (நவ7) இந்தியன் ஆயில் நிறுவனம், காஸ் கம்பெனி, கப்பலூர் ஹவுசிங் போர்டு, வேடர் புளியங்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், பிஆர்சி காலனி, நிலையூர், ஆர்வி பட்டி, கைத்தறி நகர், எஸ்ஆர்வி நகர், இந்திரா நகர், கப்பலூர், சிட்கோ, மெப்கோ கம்பெனி, தியாகராஜர் மில், கருவேலம்பட்டி, சம்பகுளம், பரம்புபட்டி, மில் காலனி, எஸ்.புளியங்குளம், சொக்கநாதன் பட்டி, தர்மத்துப்பட்டி பகுதிகளில் மின்தடை.
News November 6, 2025
மதுரை: +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை

மதுரை, சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணவி(16). மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். 3 மாதத்திற்கு முன்பு இவருக்கு கை வலி ஏற்பட, அவரால் எழுத முடியவில்லை. நோய்க்கு சிகிச்சை பெற்றும் வலி குறையாததால் மனமுடைந்து வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 6, 2025
மதுரை: மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு

பேரையூர் அருகே உள்ள மேலக்காடனேரி இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜா 64 இவர் கடந்த மாதம் 3ம் தேதி தெருவில் நடந்து சென்ற போது அந்த வழியாக சென்ற பசு மாடு திடீரென அவரை இடித்து கீழே தள்ளியது. சாலையில் விழுந்து பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராஜா உயிரிழந்தார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


