News March 27, 2025
மதுரையில் 22 உயிரை காவு வாங்கிய இரண்டு குடும்பத்து பகை

மதுரையில் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் தி.மு.க.,வைச் சேர்ந்த வி.கே.குருசாமி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜபாண்டி குடும்பத்தினர் இடையே அரசியலுக்காக 2003-இல் மோதல் துவங்கியது. 22 ஆண்டு கால பகையில், இருதரப்பிலும் தற்போது வரை நடந்த படுகொலையுடன், 22 உயிர்கள் பலியாகி உள்ளன. சினிமாவை மிஞ்சும் இந்த கொலை வெறியாட்டம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News November 9, 2025
மதுரை சிறுவன் போக்சோவில் கைது

மதுரை நரிமேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சிறுவன் (17) அவரிடம் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அவர் 3 மாத கர்ப்பம் என தெரிந்தது. தல்லாகுளம் போலீசார் போக்சோ சட்டத்தில் சிறுவனை இன்று கைது செய்தனர்.
News November 8, 2025
மதுரை: தலை நசுங்கி கொத்தனார் பலி.!

மதுரை சோழவந்தான் அருகே விக்ரமங்கலத்தைச் சேர்ந்த தெய்வம் (47) கொத்தனார். இவர் பணி முடித்து போதையில் விக்கிரமங்கலம் பஸ் ஸ்டாண்டிலேயை படுத்துவிட்டார். இந்தநிலையில் நேற்று அதிகாலை வாகனம் ஒன்று இவர் தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவலறிந்து வந்து உடலை கைப்பற்றிய போலீசார் அவர் தலை மீது ஏறிய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News November 8, 2025
மதுரை: தெப்பத்தில் தண்ணீர் நிரப்ப முடிவு

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத்தை சுற்றி இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தெப்பத்தில் கழிவு நீர் கலக்காமல் இருக்கவும் மாநகராட்சி மூலம் தண்ணீர் நிரப்பவும் முடிவு செய்துள்ளதாக, மதுரை வைகை நதி மக்கள் இயக்கத்தை சேர்ந்த ராஜன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு அறநிலையத் துறை பதில் அளித்துள்ளது.


