News March 27, 2025

மதுரையில் 22 உயிரை காவு வாங்கிய இரண்டு குடும்பத்து பகை

image

மதுரையில் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் தி.மு.க.,வைச் சேர்ந்த வி.கே.குருசாமி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜபாண்டி குடும்பத்தினர் இடையே அரசியலுக்காக 2003-இல் மோதல் துவங்கியது. 22 ஆண்டு கால பகையில், இருதரப்பிலும் தற்போது வரை நடந்த படுகொலையுடன், 22 உயிர்கள் பலியாகி உள்ளன. சினிமாவை மிஞ்சும் இந்த கொலை வெறியாட்டம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News November 27, 2025

மதுரை: சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு போக்சோ

image

திருப்­ப­ரங்­குன்­றம் நடுத்­தெருவை சேர்ந்­த­வர் முரு­கன் மகன் கார்த்திக் (27). இவர் 17 வயது சிறுமியை சோழ­வந்­தான் கோவிலில் வைத்து ரக­சிய திரும­ணம் செய்து கொண்­டார். இதில் சிறுமி 5 மாத கர்ப்­ப­மா­னார். இதையறிந்த திருப்­பரங்­குன்­றம் மக­ளிர் ஊர்­ நல அலு­வ­லர் பத்மா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்­தார். போலீசார் கார்த்திக் மீது நேற்று போக்சோ சட்­டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

News November 27, 2025

மதுரை: கணவர் அடித்தால் CALL பண்ணுங்க!

image

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வேலைத்தளங்களில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை நடந்தால் பெண்கள் உடனடியாக 181 உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்க 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 27, 2025

மதுரையில் மூச்சுத் திணறி இளம்பெண் பலி.!

image

மதுரை தெற்குவாசல் காஜா தெருவை சேர்ந்தவர்கருப்பசாமி மனைவி காவியா (20). இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!