News April 1, 2025
மதுரையில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று மதுரை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் , சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 17, 2025
மதுரை மக்களே! SIR-தொடர்பாக ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மதுரை 10 தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த நவ. 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பதிவை எளிமைப்படுத்த வரும் 18, 19 மற்றும் 20 தேதிகளில் சிறப்பு தீவிர திருத்தும் தொடர்பாக, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.
News November 17, 2025
மதுரை: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு.!

மதுரை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000449, 9445000450, 8870678220) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 17, 2025
மதுரையில் 1,777 பேர் ஆப்சென்ட்

மதுரையில் நேற்று நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு டெட் தாள் 2 தேர்வில் 1777 பேர் ஆப்சென்ட் ஆகினர். மதுரை மாவட்டத்தில் இத்தேர்வுக்கு 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 52 மையங்களில் தேர்வு நடந்தது, 13 ஆயிரத்து 23 பேர் தேர்வு எழுதினர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. போலீஸ் பரிசோதனைக்கு பின் மையங்களுக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


