News August 18, 2024
மதுரையில் வரதட்சணை கேட்ட போலீஸ் மீது வழக்கு

திருமங்கலம் புல்லமுத்தூர் பாபுராஜ் 29 திருவாரூர் போலீஸ்காரர் இவரது மனைவி தமிழ்ச்செல்வி 2021ல் திருமண நடந்தது. திருவாரூரில் போலீஸ் குடியிருப்பில் 2023 வரை வசித்தனர். குடும்பப் பிரச்சினையால் செந்தமிழ் பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார் தன்னுடன் சேர்ந்து வாழ 5 பவுன் நகை வேண்டுமென பாபுராஜ் கேட்டதாக புகாரின் பேரில் நேற்று திருமங்கலம் மகளிர் போலீல் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 21, 2025
மதுரை: கோழிகளை விழுங்கிய பாம்பு..!

கொட்டாம்பட்டி அருகே பட்டமங்கலப்பட்டி கிராமத்தில், ஆண்டிச்சாமி என்ற விவசாயின் வீட்டின் அருகே குடியிருப்பு பகுதியில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு வந்து கோழிகளை நேற்று விழுங்க தொடங்கியது. தகவல் அறிந்த கொட்டாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் சென்ற ரஞ்சித்குமார், கண்ணன், தங்கப்பாண்டி, விஜயராஜ் அடங்கிய தீயணைப்பு வீரர்கள் அப்பாம்பை பிடித்து, வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.
News November 21, 2025
மதுரை: ரூ.1,23,100 ஊதியத்தில் வேலை., தேர்வு இல்லை!

மதுரை மக்களே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரூ.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க <
News November 21, 2025
நாளை மதுரை வரும் துணை முதல்வர்

நாளை மதுரைக்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாணவர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. மதுரை மாநகர் திமுக இளைஞரணி செயலாளர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் தளபதி எம்எல்ஏ ஆலோசனையின்படி அழகர் கோவில் சாலையில் உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார் ஏராளமான இளைஞர் அணியினர் பங்கேற்றனர்.


