News August 18, 2024
மதுரையில் வரதட்சணை கேட்ட போலீஸ் மீது வழக்கு

திருமங்கலம் புல்லமுத்தூர் பாபுராஜ் 29 திருவாரூர் போலீஸ்காரர் இவரது மனைவி தமிழ்ச்செல்வி 2021ல் திருமண நடந்தது. திருவாரூரில் போலீஸ் குடியிருப்பில் 2023 வரை வசித்தனர். குடும்பப் பிரச்சினையால் செந்தமிழ் பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார் தன்னுடன் சேர்ந்து வாழ 5 பவுன் நகை வேண்டுமென பாபுராஜ் கேட்டதாக புகாரின் பேரில் நேற்று திருமங்கலம் மகளிர் போலீல் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 17, 2025
மதுரை: +2 முடித்த பெண்கள் கவனத்திற்கு!

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் உள்ள காலி இடங்களுக்கான மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி இளநிலை பிஏ ஆங்கிலம், வரலாறு, பிஎஸ்சி கணிதம், புவியியல் & இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கும் முதுநிலை தாவரவியல் பாடப்பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. *உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
News September 17, 2025
மதுரையில் பரவும் காய்ச்சல்; என்ன செய்ய வேண்டும்?

மதுரையில் மாறி வரும் மழை – வெயில் காரணமாக டெங்கு, ப்ளூ உள்ளிட்ட வைரல் காய்ச்சல்கள் அதிகரித்துள்ளன. தற்போது 58 பேர் சிகிச்சையில் உள்ளனர். காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் ரத்தப் பரிசோதனை அவசியம். அதன் தொடர்ச்சியாக கொசுப்புழு ஒழிப்பு, குடிநீர் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் மருத்துவ ஆலோசனை இல்லாமல் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளக் கூடாது. *விழிப்புணர்வுடன் செயல்பட ஷேர்
News September 17, 2025
மதுரை மேயரின் கணவர் ஜாமீன் மனு தள்ளுபடி

வரி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மேயர் உமாவின் கணவர் பொன் வசந்த் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
ஆக.12ம் தேதி அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்.
ஜாமீன் கோரி அவர் உடல்நிலை மோசம் மற்றும் வழக்கில் தனது பெயர் காரணமின்றி சேர்க்கப்பட்டதாக வாதிட்டார். வெளிவந்தால் சாட்சிகளை கலைக்க நேரிடும் என்பதால் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.